மன நலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா நாகலாபுரத்தில் ரோட்டோரத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக தகவல் அறிந்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் மாவட்ட மன நல திட்ட மருத்துவர் நிரஞ்சனா தேவி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் மீட்பு குழுவினர் நேரில் சென்றனர்.

அவர்களுடன் நாகலாபுரம் காவல் நிலைய காவலர்கள் சிங்கராஜ்,முத்து வைரம் , தேனம்மாள் முதியோர் இல்ல மேலாளர் சேகர் ஆக்டிவ் மைண்ட் ஸ் மன நல காப்பக நிர்வாகி தேன் ராஜா,மேற்பார்வையாளர் மாடசாமி, காப்பக ஊழியர் அந்தோணி ரோஸி,ஆகியோர் சென்று பொது மக்கள் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டனர்.
பின்னர் முடுக்குமீன்டான் பட்டியில் உள்ள ஆக்டிவ் மைண்ட்ஸ் மன நல காப்பகத்துக்கு அழைத்து சென்று மருத்துவ உதவிகள் செய்துதந்தனர். அதை தொடர்ந்து காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்
