ஈரோடு கிழக்கு தொகுதியில் நிலவரி ரத்து செய்தது தேர்தல் விதிமீறல்; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: இடைத்தேர்தலில் த.மா.கா.விற்கு சீட் கொடுக்காமல் கூட்டணி தர்மத்தை மீறுவதாக கே.எஸ்.அழகிரி கூறுகிறாரே?
பதில்: எங்களது விருப்பத்தை தெரிவித்தோம். கூட்டணியினரும் ஏற்றுக்கொண்டார்கள். எங்களுக்கு தைரியம் இருக்கிறது நிற்கிறோம். ஆனால் ஓ.பி.எஸ்.க்கு முன்மொழிய யாருமே இல்லை. தினகரனுக்கு தேர்தல் என்றாலே பயம் ஏற்பட்டுவிடுகிறது. மேலும் இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிற்கிறது. அதனால் நாங்களும் நிற்கிறோம் என்று தி.மு.க. வரவேண்டியதுதானே? ஆனால் வரவில்லையே? காரணம் தோல்வியடைந்தால் நாங்கள் நிற்கவில்லை. காங்கிரஸ்தான் நின்றது என்று சொல்லி தப்பித்துவிடலாம்.
ஏனென்றால் பொங்கல் தொகுப்பில் ஏமாற்றம், நகைக்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் ஏமாற்றியது என பல்வேறு வகையில் தி.மு.க. எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. அதோடு சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். உதயநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில்தான் முகாமிட்டுள்ளார்கள். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் தற்போது நிலவரி ரத்து செய்துள்ளார்கள். ஏன் தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்திருக்கலாமே? அதேபோல் பட்டா வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார்கள். பள்ளியில் அமைச்சர்கள் ஆசிரியர்களை சந்திக்கிறார்கள். பல்வேறு பணிகளை அவசர அவசரமாக செய்கிறார்கள். இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் அல்லவா? தி.மு.க.வினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் சுத்தி சுத்தி வந்தாலும், பணம் கொடுத்தாலும் சரி வாக்குகள் அனைத்தும் அனைத்திதந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் கிடைக்கும்.

கேள்வி: தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியது கருணாநிதியின் பேனா என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறாரே?
பதில்: அவரை பொறுத்தவரை சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஆனால் உண்மையிலே மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கின்ற வகையில் உள்ளது. அவர்கள் தொழில் செய்ய முடியாத சூழ்நிலையையும் ஏற்பட்டுள்ளது. எனவேதான் அந்த நினைவு சின்னம் தேவையா? மேலும் இதனால் 30 கிராமங்கள் பாதிக்கப்படும். அதோடு மீன்கள் இனப்பெருக்கமும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டுமா? அதற்கு பதில் அறிவாலயத்தில் நினைவு சின்னம் அவர்களது சொந்த செலவில் வைக்கலாமே? அரசு பள்ளிக்கு நிதி இல்லை என்கிறார்கள். ஆனால் நினைவு சின்னத்திற்கு மட்டும் எப்படி நிதியை ஒதுக்கலாம்? இதனை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கிறது. மேலும் நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் “எங்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது. இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்கிறார்கள்.
கேள்வி: கமல்ஹாசன் ஈரோடு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யப்போகிறாராமே?
பதில்: ஆரம்பத்திலே சொன்னேன். அவரது கட்சி தி.மு.க.வின்
“பி” டீமாகத்தான் இருக்கும். அது இப்போது வெளிப்படுகிறது. அவர் கட்சியை ஆரம்பித்ததற்கு காரணமே அவரை காப்பாற்றிக்கொள்வதற்குத்தான். மற்றபடி மக்களுக்கு நல்லது செய்வதற்காக அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை.
கேள்வி: போக்குவரத்து துறையிலே தனியார் துறை மூலம் ஆட்களை எடுப்போம் என்கிறார்கள். ஆனால் டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஆட்களை எடுப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை மறந்துவிட்டார்களே?
பதில்: இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்களது கட்சிக்காரர்களை உள்ளே நுழைக்க வேண்டும் என்ற செயல்பாடுதான் இதெல்லாம். வருடத்திற்கு ஒரு லட்சம் பேரை பணியமர்த்தோ£ம் என்றார்கள். ஆனால் இதுவரை எதுவும் செய்யவில¢லை. போதாக்குறைக்கு ஆட்குறைப்பு என்ற பெயரில் பணியில் இருக்கிறவர்களை தான் நீக்குகிறார்கள். அந்த வகையில் ஒரு மோசமான தரங்கெட்ட ஆட்சி நடைபெறுகிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்

