தூத்துக்குடி மண்டலத்தில் 4 நெல் சேமிப்பு தளங்கள் திறப்பு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சனிக்கிழமை (பிப்.11) சென்னை தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 105.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களைத் திறந்து வைத்தார்.
மேலும், 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதன்படி தூத்துக்குடி மண்டலத்தில் ரூ.4.18 கோடி மதிப்பில் மேற்கூரையுடன் கூடிய 4 நெல் சேமிப்புத் தளங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ; காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வே. ராஜாராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு. பிரபாகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தூத்துக்குடி மண்டலத்தில் ரூ.418 கோடி மதிப்பில் 4 புதிய மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நவீன நெல் சேமிப்பு தளங்களை பார்வையிட்டார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மண்டல மேலாளர் (பொ) வே.காண்டிபன் ஆகியோர் உடன் சென்றனர்.

