கோவில்பட்டி தினசரி சந்தைக்கு செல்லும் ஓடைபாலத்தில் சரிந்த லாரி; போக்குவரத்து பாதிப்பு

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையின் பிரதான நுழைவு வாசல் மார்க்கெட் ரோட்டில் உள்ளது. இன்னொரு வாசல் மெயின்ரோட்டில் ராமசாமி பழைய ராமசாமி தியேட்டர் செல்லக்கூடிய ஓடை பாலம் தாண்டி உள்ளது,.
இந்த நுழைவு வாசல் வழியாக இரு சக்கர வாகனம் மட்டும்தான் செல்லமுடியும். லாரிகளில் வாரும் சரக்குகள் இந்த வாசலுக்கு முன்பாக நிறுத்தி அங்கிருந்து சரக்குகள் இறக்குவது வழக்கும்.
இதனால் இந்த பாதை காலை நேரத்தில் மிகுந்த நெருக்கடியில் சிக்கி தவிக்கும், இன்று பகலில் வழக்கம் போல் சீனி மூட்டைகள் ஏற்றி வந்த ஒரு லாரி இந்த ஓடைபாலம் வழியாக சென்று ஒரு சில மளிகை கடைகளில் சீனி மூட்டைகளை சரக்குகளை இறக்கி விட்டு மறுபடியும் திரும்பியபோது ஓடைபாலத்தின் வலதுபுற ஓரத்தில் சாலை பழுது காரணமாக அதிக எடை ஏற்றி வந்த லாரியின் சக்கரம் சிக்கி லேசாக மணல் சரிவு ஏற்பட்டது,

நல்லவேளையாக டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு லாரியை நிறுத்தி விட்டார்.. லேசாக சரிந்த நிலையில் லாரி நிறுத்தப்பட்டு விட்டது. அருகிலேயே மாலையம்மன் கோவிலுக்கு செல்லக்கூடிய தற்காலிக தரைப்பாலம் உள்ளது. டிரைவர் சிறிது அஜாக்கிரதையாக இருந்திருந்தாலும் லாரி ஓடைக்குள் கவிழ்ந்து இருக்கும்..
இதன் காரணமாக இந்த ஓடைபாலம் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

