கோவில்பட்டி தினசரி சந்தை அதே இடத்தில் தொடரக்கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜனதா காத்திருக்கும் போராட்டம்

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை அதே இடத்தில் தொடரவேண்டும், ஒதுக்கப்பட்ட நிதியில் கூடுதலாக மொத்த தினசரி சந்தையை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது.
இதற்கு அனுமதி மறுக்கபட்டதால் இன்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
பா.ஜனதா நகரத் தலைவர் போலீஸ் சீனிவாசன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் வேலு ராஜா முன்னிலையில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

இதுபற்றி அறிந்ததும் வருவாய் கோட்டாட்சியர்நேர்முக உதவியாளர் இசக்கிராஜா மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், கோரிக்கைகள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு விளக்கி கூறப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் காவல்துறை பா.ஜ.க. போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது பற்றி விவாதிக்க அனுமதி அளித்துள்ளனர்
இதை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை விலக்கிக்கொண்ட பா.ஜனதா கட்சியினர் வருவாய் கொட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

