• June 8, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் 3 நாட்கள் பிரசாரம்

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் 3 நாட்கள்  பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்,

இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ‘கை’ சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் 3 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 19, 20, மற்றும் 21 ஆகிய தேதிகள் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபடுவார் என்ற  தகவல் வெளியாகியுள்ளது.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *