தூத்துக்குடி டூவிபுரம் வி.வி.டி. மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சுப்புலெட்சுமி (37). இவர்களுக்கு மஞ்சு (16), ஹரிஷா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். ஹரிஷா அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று கோரம்பள்ளத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜயகுமார், சுப்புலெட்சுமி, மஞ்சு, ஹரிஷா மற்றும் ராமகிருஷ்ணன் என்பவரது மகள் சுதா பிரியா (21) ஆகியோர் ஒரு ஆட்டோவில் சென்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மில்லர்புரம் […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் வீரகாந்தி, இவர் மீது பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சஸ்பெண்டு(தற்காலிக வேலைநீக்கம்) செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீதான புகார் ,மீது இலாகாபூர்வ விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில் இன்ஸ்பெக்டர் வீரகாந்தி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது,/ இதையடுத்து வீரகாந்தியை டிஸ்மிஸ் (பணிநீக்கம்)செய்து டி.ஐ.ஜி. அபிநவ் குமார் உத்தரவு. பிறப்பித்தார்..
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- : பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதத்திற்கான சிறப்பு முகாம் 11.2.2023 ( சனிக்கிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் 1.மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் […]
திருநெல்வேலியில் நடந்த அதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்ற அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவில்பட்டி பை-பாஸ் சாலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளரும் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கூடி இருந்தனர், அவர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர். அதிமுக அமைப்பு செயலாளர் சி.த.செள்ளப்பாண்டியனும் இந்த […]
கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்துள்ள திரைப்படம் ‘டாடா’. இப்படம் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான’லிஃப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நடிகர் கவின் தற்போது […]
இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும்; துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்த ஆய்வாளர் எச்சரிக்கை
துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற […]
கோவில்பட்டி டால்துரை பங்களா தெருவை சேர்ந்தவர் அ.மாரியப்பன்(வயது 60). இவர் பிரதான சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரைச் சேர்ந்த வேல்சாமி மனைவி வாசுகி(45) என்பவர் கடந்த 6.10.2013-ல் ரூ.8 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இதற்காக கடந்த 20.1.2015-ல் தனியார் வங்கி காசோலை வழங்கினார். இந்த காசோலையை மாரியப்பன் வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லையென திரும்பியது. இதையடுத்து மாரியப்பன் கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை […]
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தினமும் 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்கின்றன. இந்தப் படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மீ ன்பிடித்தொழிலில் கிடைக்கும் லாப,த்தில் உரிமையாளர்களுக்கு 61 சதவீதமும் தொழிலாளர்களுக்கு 39 சதவீதமும் என்ற அடிப்படையில் பங்கு பணம் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு படகுக்கும் வட்ட பணம் என்ற பெயரில், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய 10 முதல் 14 சதவீதத் தொகையை, உரிமையாளர்கள் […]
கோவில்பட்டியில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை, மீண்டும் அமைக்ககோரி தே.மு.தி.க.வினர்
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிர்புறம், ரெயில் நிலையம் நுழைவு வாயில் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடையை சாலை விரிவாக்கத்தின் போது அகற்றிவிட்டனர். சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் மீண்டும் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவ- மாணவிகள், பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பெரிதும் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே விரைந்து பயணிகள் நிழற்குடையை அமைக்க வலியுறுத்தி தேசிய முற்போக்கு […]
கோவில்பட்டியில் புதிய மின் இணைப்புக்கான தளவாட பொருட்கள் பற்றாக்குறையை நீக்கவேண்டும்; தமிழ் மாநில
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர் தலைவர் கே.பி.ராஜகோபால், தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி நகரம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் பெரிய நகரம் ஒவ்வொரு நாளும்வளர்ச்சியை நோக்கி செல்லக்கூடிய நிலையினால் ஏராளமான மக்கள் கோவில்பட்டியினை நோக்கி வருகின்றார்கள் இதனால் நாளுக்கு நாள் கட்டிட பணிகளும் வளர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது கட்டிடப் பணிகள் செய்வதில் மிக முக்கியமாக இருப்பது மின்சாரம் இன்றைக்கு […]