பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: போலீஸ் இன்ஸ்பெக்டர் `டிஸ்மிஸ்’

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் வீரகாந்தி, இவர் மீது பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கூறப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் சஸ்பெண்டு(தற்காலிக வேலைநீக்கம்) செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீதான புகார் ,மீது இலாகாபூர்வ விசாரணை நடந்து வந்தது.
இந்த விசாரணையில் இன்ஸ்பெக்டர் வீரகாந்தி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது,/ இதையடுத்து வீரகாந்தியை டிஸ்மிஸ் (பணிநீக்கம்)செய்து டி.ஐ.ஜி. அபிநவ் குமார் உத்தரவு. பிறப்பித்தார்..
