• June 8, 2025

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து சிறுமி பலி; பெற்றோர் உள்பட 4பேர் காயம்

 தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து சிறுமி பலி; பெற்றோர் உள்பட 4பேர் காயம்

தூத்துக்குடி டூவிபுரம் வி.வி.டி. மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சுப்புலெட்சுமி (37). இவர்களுக்கு மஞ்சு (16), ஹரிஷா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். ஹரிஷா அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று கோரம்பள்ளத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜயகுமார், சுப்புலெட்சுமி, மஞ்சு, ஹரிஷா மற்றும் ராமகிருஷ்ணன் என்பவரது மகள் சுதா பிரியா (21) ஆகியோர் ஒரு ஆட்டோவில்  சென்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். 

மில்லர்புரம் பகுதியில் வந்தபோது ஆட்டோ மீது பின்னால் வந்த லோடு ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. விஜயகுமார் குடும்பத்தினர் சென்ற ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில்  மேல்சிகிச்சைக்காக ஹரிஷா மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *