• June 8, 2025

கோவில்பட்டியில்  புதிய மின் இணைப்புக்கான தளவாட பொருட்கள் பற்றாக்குறையை நீக்கவேண்டும்; தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தல்

 கோவில்பட்டியில்  புதிய மின் இணைப்புக்கான தளவாட பொருட்கள் பற்றாக்குறையை நீக்கவேண்டும்; தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர் தலைவர் கே.பி.ராஜகோபால், தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

கோவில்பட்டி நகரம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் பெரிய  நகரம்  ஒவ்வொரு நாளும்வளர்ச்சியை நோக்கி செல்லக்கூடிய நிலையினால் ஏராளமான மக்கள் கோவில்பட்டியினை நோக்கி வருகின்றார்கள்

இதனால் நாளுக்கு நாள் கட்டிட பணிகளும் வளர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது கட்டிடப் பணிகள் செய்வதில் மிக முக்கியமாக இருப்பது மின்சாரம் இன்றைக்கு கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு புதிய மின் இணைப்பு கேட்டு அதிகமான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்தது

அவர்களுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியினை சிறப்பாக மின்வாரிய அலுவலகம் ஊழியர்கள் செய்து வந்தாலும் மின் இணைப்பு கொடுப்பதற்கான மின் கம்பங்கள் மீட்டர்கள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிய வருகிறது

மேலும் கடந்த ஒரு வாரமாக போதுமான அளவு மின் மீட்டர்கள் இருப்பில் இல்லை என்பதால் புதிய மின் இணைப்பு கொடுக்க முடியாமல் ஊழியர்கள் பரிதவித்து வருகின்ற நிலை உள்ளது இதனால் பல இடங்களில் கட்டுமான பணிகள் தேக்கமடைந்து காணப்படும் சூழல் நிலவி வருகிறது

 தங்கு தடை இன்றி மின் இணைப்பு உடனுக்குடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் கோவில்பட்டி நகரில் மின் மீட்டர் தட்டுப்பாட்டால் மின் இணைப்பு கொடுப்பதில் தொடர்ந்து கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது எனவே தமிழக அரசு கருத்தில் கொண்டு மின் மீட்டர் உள்ளிட்ட தளவாட பொருட்களை எவ்வித தங்கு தடையும் இன்றி தந்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

குறிப்பாக கட்டுமான பணிகள் தேக்கத்தினால் தொழிலாளர் நிறைந்த பகுதியான இந்த பகுதியில் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்தை அடைந்து வருகின்றார்கள் என்பதை தங்களை மேலான கவனத்திற்கு தெரியப்படுத்திக்கொள்கின்றேன்

இவ்வாறு கே.பி.ராஜகோபால்  கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *