கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

திருநெல்வேலியில் நடந்த அதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்ற அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவில்பட்டி பை-பாஸ் சாலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளரும் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கூடி இருந்தனர், அவர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர். அதிமுக அமைப்பு செயலாளர் சி.த.செள்ளப்பாண்டியனும் இந்த வரவேற்பில் கலந்து கொண்டார்/
எட்டயபுரம் நகர செயலார் ராஜ்குமார்,,வார்டு செயலாளர்கள் சிவசங்கர பாண்டியன்,கார்டன் பிரபு, சின்னத்துரை, கன்னியப்பன், கருப்பசாமி,சொக்கன்,மோகன், எட்டயபுரம் மகளிர் அணி நிர்வாகிகள் செல்வி, சாந்தி, ரத்தினம் பூங்கொத்து அளித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்
வரவேற்பு நிகழச்சி முடிந்ததும் திருநெல்வேலி சென்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது,:-
கடந்த 21 மாதங்களாக திமுக ஆட்சி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. திமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கவில்லை. சிலிண்டர் மானியம் கொடுக்கவில்லை. பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, ரவுடிகளின் அட்டூழியம் அதிக அளவில் அதிகரித்து உள்ளது. பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது. போதை பொருள் இளைஞர்களிடத்தில் அதிகரித்துள்ளது. காவல்துறை வாகனத்தை திருடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கொட்டுள்ளது.
கடலில் பேனா வைக்கவேண்டிய அவசியம் இல்லை. தரையில் வைக்கலாம். எழுதாத பேனாவிற்கு 80 கோடி செலவு செய்வது தேவையற்றது.
அதிமுகவிற்கு யாரும் உதவவில்லை. அதிமுக தான் பலருக்கும் உதவியாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அதிமுக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெறும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
