• June 7, 2025

Month: December 2022

கோவில்பட்டி

புது அப்பனேரி வாக்குசாவடி மையத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு முகாம்

கோவில்பட்டியை அடுத்த திருவேங்கடம் தேர்தல் தனித்துணை வட்டாட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:;- பாகம் எண் 178க்கு உட்பட்ட சுபா நகர் மற்றும் புது அப்பனேரி வாக்காளர்களுக்கு வணக்கம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணியினை விரைவு படுத்தி  முடித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. நமது சட்டமன்றத் தொகுதியில் மிகக் குறைவான அளவில் இணைப்பு பணி நடைபெற்றுள்ளது இது மிகவும் வருந்தத்தக்கது. நாளை 17. 12. 2022 அன்று புது […]

கோவில்பட்டி

காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ அனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:- நமது மாவட்டத்கில் கோவில்பட்டி, கயத்தார், புதூர், விளாத்திகுளம், ஓட்டபிடாரம் ஆகிய வட்டங்களில் மானாவாரி மற்றும் கிணற்றுபாசனம் மூலமாக பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களில் மக்காச்சோளம் , கம்பு, உளுந்து, பாசிபயிறு, எள், பருத்தி ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன. அதில் விலையும் தருவாயில்  உள்ள மக்காச்சோளம் பயறு வகை பயிர்களை மான்கள் மற்றும் […]

செய்திகள்

கொலை வழக்கில் தவறாக கைது: பாதிக்கப்பட்ட 2 பேருக்கு  ரூ.18 லட்சம் இழப்பீடு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 2013-ம் ஆண்டு பா.ஜ.க பிரமுகர் முருகேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தவறாக கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்ட ராஜா முகமதுவு என்பவருக்கு ரூ.10 லட்சமும், மனோகரனுக்கு ரூ.8 லட்சமும் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காவல்துறை ஆய்வாளரின் தவறான விசாரணையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டதால் இருவரின் குடும்பம் பாதிக்கப்பட்டதாக கூறி இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டு தொகையை காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் என்பவரிடம் இருந்த […]

செய்திகள்

உணவு பொருளில் கலப்படம்:; 2 பேருக்கு ஒரு நாள் சிறை தண்டனை

திண்டுக்கல் கச்சேரி தெருவில் உள்ள கடைகளில் கடந்த 2019ம் ஆண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர், அப்போது ஒரு  மளிகை கடையில் உணவுப் பொருளில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கடை உரிமையாளர் ஆயுப்கான் மற்றும் மசாலா பொருள் தயாரித்த ராஜா ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இன்று வழக்கு விசாரணையில் இருவருக்கும் ஒரு நாள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் மீனாட்சி […]

செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மை எரிப்பு; 13 பேருக்கு அபராதம்

கடந்த 2017ல் அ.தி.மு.க. ஆட்சியில்,  அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில்  அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன்,  உருவ பொம்மை எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பாண்டி ராதா, நல்லதம்பி, கோவிந்தராஜன் உட்பட 13 பேருக்கு தலா ரூ 1000 அபராதம் விதித்து இன்று  தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்ட தவறினால் 3 […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில்  17-ந் தேதி மின்தடை

கோவில்பட்டி மின் கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, கழுகுமலை, செட்டிகுறிச்சி, எம். துரைச்சாமிபுரம், வானரமுட்டி, சன்னதுபுதுக்குடி, கயத்தாறு, கடம்பூர், பசுவந்தனை, ஒட்டநத்தம்,  எப்போதும்வென்றான்,  எட்டயபுரம், நாகலாபுரம், சூரங்குடி, விஜயாபுரி, திட்டங்குளம் ஆகிய பகுதிகளில் மின்சார பராமரிப்பு பணிகள காரணமாக நாளை (டிசம்பர் .17) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கபட்டு உள்ளது.

கோவில்பட்டி

கோவில்பட்டி மெயின்ரோடு ஓடையில் தடுப்பு சுவர், நடைபாதை; ரூ.87 லட்சம் செலவில் பணிகள்

கோவில்பட்டி மெயின் ரோட்டில்  செவல்குளம் நீரோடை உள்ளது, இங்கு  பூவனநாதசுவாமி திருக்கோயில் தேவஸ்தானப் பயன்பாட்டுக்கு உட்பட்ட 108 கடைகள் மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பில் 25 கடைகள் இருந்தன. இந்த ஆக்கிரம்கிப்பு நீண்ட காலமாக இருந்து வந்தது,. ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டிடமாக கட்டிக்கொண்டனர்,. இதன் காரணமாக மழைநீர், நீரோடைக்கு செல்லமுடியாமல் சாலையில் தேங்குவது வாடிக்கையாக இருந்தது, இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் முதல் ரெயில்வே மேம்பாலம் […]

செய்திகள்

சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய அரசு அனுமதி

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு தமிழக அரசு இன்று ஒப்புதல் அளித்திருப்பதை அடுத்து, இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் தான், இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் 90 […]

செய்திகள்

தி.மு.க. அரசின் காவல் துறை,  போதை பொருள் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை

அ.தி.மு.க. தற்காலிக பொதுசெயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொய்யிலே பிறந்து, பொய்யிலே வாழும் தமிழகத்தின் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும், அவருக்குக் கீழ் பணியாற்றும் ஒருசில உயர் அதிகாரிகளும் அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட திட்டங்களை, ஈர்த்த முதலீடுகளை திமுக அரசு கொண்டுவந்ததாக ஸ்டிக்கர் ஒட்டி, இந்த கையாலாகாத அரசைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். கடந்த 19 மாத திமுக மாடல் ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருவது கண்கூடு. ஆனால், […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ, மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தகுதியுள்ள, தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  தனியார்துறை […]