காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – கடம்பூர் ராஜூ கோரிக்கை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ அனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
நமது மாவட்டத்கில் கோவில்பட்டி, கயத்தார், புதூர், விளாத்திகுளம், ஓட்டபிடாரம் ஆகிய வட்டங்களில் மானாவாரி மற்றும் கிணற்றுபாசனம் மூலமாக பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களில் மக்காச்சோளம் , கம்பு, உளுந்து, பாசிபயிறு, எள், பருத்தி ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன.
அதில் விலையும் தருவாயில் உள்ள மக்காச்சோளம் பயறு வகை பயிர்களை மான்கள் மற்றும் காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் அதிக சேதங்களை ஏற்படுத்தி உள்ளன, சேதம் அடைந்த மக்காச்சோள கதிர்களை இத்துடன் அனுப்பி உள்ளேன் காத்தார் வட்டம் சவலாப்பேரி கிராமத்தில் நான் ,நேரடி கள ஆய்வு மேற்கொண்டேன்,
எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் உரிய கருத்துருவை அரசின் கவனத்துக்கு அனுப்பி பாதிக்க்கபப்ட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைத்திட வேண்டுகிறேன்,. ஒவ்வொரு ஏக்கர் நிலத்திலும் சுமார் ரூ.40 ஆயிரம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்,
இவ்வாறு அந்த மனுவில் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டு உள்ளார்.
