• June 8, 2025

கொலை வழக்கில் தவறாக கைது: பாதிக்கப்பட்ட 2 பேருக்கு  ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

 கொலை வழக்கில் தவறாக கைது: பாதிக்கப்பட்ட 2 பேருக்கு  ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 2013-ம் ஆண்டு பா.ஜ.க பிரமுகர் முருகேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தவறாக கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்ட ராஜா முகமதுவு என்பவருக்கு ரூ.10 லட்சமும், மனோகரனுக்கு ரூ.8 லட்சமும் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை ஆய்வாளரின் தவறான விசாரணையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டதால் இருவரின் குடும்பம் பாதிக்கப்பட்டதாக கூறி இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இழப்பீட்டு தொகையை காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் என்பவரிடம் இருந்த வசூல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பரமக்குடியை சேர்ந்த ராஜா முகமது, மனோகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் மதுரை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *