• June 8, 2025

எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மை எரிப்பு; 13 பேருக்கு அபராதம்

 எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மை எரிப்பு; 13 பேருக்கு அபராதம்

கடந்த 2017ல் அ.தி.மு.க. ஆட்சியில்,  அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில்  அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன்,  உருவ பொம்மை எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பாண்டி ராதா, நல்லதம்பி, கோவிந்தராஜன் உட்பட 13 பேருக்கு தலா ரூ 1000 அபராதம் விதித்து இன்று  தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று  பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *