கோவில்பட்டி மெயின்ரோடு ஓடையில் தடுப்பு சுவர், நடைபாதை; ரூ.87 லட்சம் செலவில் பணிகள் தொடக்கம்

கோவில்பட்டி மெயின் ரோட்டில் செவல்குளம் நீரோடை உள்ளது, இங்கு பூவனநாதசுவாமி திருக்கோயில் தேவஸ்தானப் பயன்பாட்டுக்கு உட்பட்ட 108 கடைகள் மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பில் 25 கடைகள் இருந்தன. இந்த ஆக்கிரம்கிப்பு நீண்ட காலமாக இருந்து வந்தது,. ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டிடமாக கட்டிக்கொண்டனர்,.
இதன் காரணமாக மழைநீர், நீரோடைக்கு செல்லமுடியாமல் சாலையில் தேங்குவது வாடிக்கையாக இருந்தது, இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் முதல் ரெயில்வே மேம்பாலம் வரை சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி தொடங்கியது..
ஓடை மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றிய பின்னரே, சாலை விரிவாக்கப் பணி முறையாக நடைபெற வேண்டும் என ஆக்கிரமிப்பு மீட்புக்குழுவினர் மற்றும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
l இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி 2019 ஆக.26-ம் தேதி நடந்தது. இதில், ஓடை மீது கட்டப்பட்ட தனிநபர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களான 13 கடைகள் அகற்றப்பட்டன. மீதமுள்ள தனியாருக்கு சொந்தமான 12 கடைகள் மற்றும் தேவஸ்தானப் பயன்பாட்டுக்கு உட்பட்ட 108 கடைகளும் நீதிமன்ற வழக்கு நிலுவைக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஓடை மீது கட்டப்பட்ட தனிநபர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களான 12 கடைகள் குறித்த நீதிமன்ற வழக்குகளில் எவ்வித தடை உத்தரவும், பிறப்பிக்கபடாததையடுத்து தனிநபர்களால் ஓடை மீது கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை, 2019 செப்.12-ம் தேதி ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள தனியார் கடைகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், பூவனநாத சுவாமி கோயிலுக்குப் பாத்தியப்பட்ட நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள 108 கட்டமைப்புகளுக்கும், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்சநீதிமன்றத்தில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு நவம்பர் 27 அன்று
108 நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.இதனால் சாலை விரிவடைந்தது, மழை நீர் தேங்குவது நின்றுபோனது,. அதே சமயம் ஓடைக்கு அருகில் வாகனங்களை நிறுத்த தொடங்கி விட்டனர், வாடகை வேன்கள் நிறுத்தப்படுகின்றன, மேலும் நடைபாதை கடைகளும் உருவாகி விட்டன,
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கிவிட்டது. மேலும் ஓடை பாதுகாப்பற்ற நிலையில் காட்சி அளிக்கிறது,
இதன் காரணமாக ஓடையின் கிழக்கு பகுதியில் சாலையை ஒட்டி மெயின்ரோட்டில் ஜோதிலிங்கம் பட்டுமாளிகை எதிர்புறம் உள்ள ஓடையில் இருந்து சத்தியபாமா தியேட்டர் வரை தடுப்பு சுவர் கட்டி, பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக பேவர் பிளாக் நடைபாதை அமைக்க நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இதற்கு ரூ.87 லட்சம் செலவிடப்படுகிறது.
இதையொட்டி முதற்கட்டமாக ஓடையில் தடுப்பு சுவர் கட்டும்பணி பணிகள் இன்று காலை தொடங்கின. ஓடையில் ஜே.சி.பி,. இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், உதவி பொறியாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தன. அநேகமாக் இன்னும் 15 நாட்களில் இந்த பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,.
