Month: December 2022

கோவில்பட்டி

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தேர்தல்: ஆலோசனை கூட்டத்தில் பி.ஏ.கே.பழனிச்செல்வம் அணி வேட்பாளர்கள்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்தின் 2022-2025 நிர்வாககுழு தேர்தல் வருகிற 25-ந் தேதி நடக்கிறது, இதற்கான வாக்குபதிவு பாண்டவர்மங்கலம் காமராஜர் இண்டர்நேஷனல் அகாடமியில் நடக்கிறது, இந்த தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமையில் 65 பேர் நிர்வாக குழுவில் போட்டியிடுகிறார்கள். இவர்களை எதிர்த்து எம்.டி.எம்.தங்கராஜ் தலைமையிலான அணியினர் போட்டியிடுகிறார்கள்.நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமையிலான அணிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.. இந்த அணியினரின் தேர்தல் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி பசுவந்தனை ரோடு காமராஜர் அரங்கத்தில் […]

செய்திகள்

பள்ளிகள் அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருக்கிறது,. அதன்படி தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் டிச.ம்பர்  23-ம் தேதி வரை விடுமுறை ஆகு,ம். 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிசம்பர் 19 ந் தேதி தேர்வு தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கு பிறகு, .24-ம் தேதி முதல் ஜன.1-ம் தேதி வரை, 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை. ஆகும் ஜனவரி  2-ம் […]

கோவில்பட்டி

பள்ளிக்குள் சென்று மாணவரை தாக்கிய 2 பெண்கள் கைது

கோவில்பட்டியை அடுத்த சிதம்பரம்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமி(வயது 30). இவரது மகனும், பசும்பொன் நகரைச் சோ்ந்த மாரியம்மாள்(30) என்பவரது மகளும் அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், வகுப்பறையில் எதிா்பாராமல் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக, லட்சுமியின் மகனை மாரியம்மாளும், சிதம்பரம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மற்றொரு லட்சுமியும் (40) சோ்ந்து பள்ளிக்குச சென்று தாக்கினராம். இதில், காயமடைந்த மாணவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.இதுகுறித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூா் போலீசார்  வழக்குப் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க நிர்வாக குழு தேர்தல் ஆலோசனை கூட்டம்; நாளை

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்தின் 2022-2025 நிர்வாககுழு தேர்தல் வருகிற 25-ந் தேதி நடக்கிறது, இதற்கான வாக்குபதிவு பாண்டவர்மங்கலம் காமராஜர்  இண்டர்நேஷனல் அகாடமியில் நடக்கிறது, இதையொட்டி தேர்தல் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி பசுவந்தனை ரோடு காமராஜர் அரங்கத்தில் நாளை ஞாயிற்றுகிழமை காலை 11 மணிக்கு நடக்கிறது, நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை தாங்குகிறார். துணை தலைவர் எம்,.செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ்குமார் , நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளரும், நகரசபை துணை தலைவருமான  ஆர்.எஸ்.ரமேஷ் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தி.மு.க. பற்றி பா.ஜ.க.புகார் மனு

கோவில்பட்டியில் தி.மு.க. வை சேர்ந்தவர்கள்  அனுமதி இல்லாமல் பிரசார ஆட்டோ ஓட்டுவதை கண்டித்து கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் அலுவலகம் முன்பு கூடி கோஷம் எழுப்பினர். பின்னர் அனுமதி இல்லாமல் ஓடிய ஆட்டோ மீது நடவடிக்கை எடுக்க சொல்லி பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜா தலைமையில், நகர தலைவர் போலீஸ் சீனிவாசன் முன்னிலையில், மனு அளிக்கப்பட்டது,

செய்திகள்

மதுரையில் மீனாட்சி அம்மன் -சுந்தரேசுவரர் சப்பர திருவிழா; வீதிகளில் தூவிய அரிசியை பெண்கள்

பிரசித்தி  பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும்  சித்திரை பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளந்த லீலையை விளக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மார்கழி தேய்பிறை அஷ்டமி திருவிழா நேற்று நடத்தது. இதையொட்டி தேர் போன்ற பெரிய சப்பரங்கள் அலங்கரிக்கப்பட்டு, தயார் நிலையில் இருந்தன. அதிகாலையில் […]

தூத்துக்குடி

குஜராத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்; மாநாட்டில் அமைச்சர்

தூத்துக்குடி மாவட்ட இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 5-வது தேசிய உப்பு மாநாடு தூத்துக்குடியில் நடந்தது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது-: நாட்டில் உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி 2-வது இடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்தில் மட்டும் 79 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.  இங்கே 9 சதவீதம் மட்டும் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, குஜராத் மாநில […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பள்ளிக்கூடம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனையா? கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை சார்பில் கோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளியை சுற்றி 100 அடி எல்லைக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பீடி, சிகரெட் போன்றவை விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு நடத்தும் பணி நேற்று நடந்தது. தூத்துக்குடி மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் டாக்டர் வேணுகாதேவி தலைமையில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே வெள்ளரிக்காய் விளைச்சல் அமோகம்; விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிளையூரணி கிராமத்தில் விவசாயிகள் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மானாவாரியாக வெள்ளரி, பீர்க்கங்காய் ஆகியவற்றை பயிரிட்டு வருகின்றனர். இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழையை நம்பி புரட்டாசி மாதம் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் வெள்ளரி, பீர்க்கங்காய் விதைகளை விவசாயிகள் விதைத்தனர். மானாவாரி பயிர்களுக்கு ஏற்ற வகையில் பருவமழை பெய்துள்ளதால் அவை நன்றாக வளர்ந்து காய்கள் காய்த்து தற்போது அறுவடை நடந்து வருகிறது. தற்போது விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மது அருந்தும் போது தகராறு :கூலி தொழிலாளி கொலை -அண்ணன் ஆத்திரம்

கோவில்பட்டியை அடுத்த மேலபாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த பூல்சாமி என்ற கொம்பையா மகன் கருப்பசாமி (வயது 26). இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் இன்று இரவு தனது அண்ணன் பாண்டித்துரையுடன் (29) மந்திதோப்பு சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான பாரில் மதுபானம் அருந்த சென்றார்.அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மதுபான பாரை விட்டு வெளியே வந்த இருவரும் சிறு தூரம் நடந்து சென்றனர். அப்போது மீண்டும் தகராறு ஏற்படவே பாண்டித்துரை […]