• June 8, 2025

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க நிர்வாக குழு தேர்தல் ஆலோசனை கூட்டம்; நாளை நடக்கிறது

 கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க நிர்வாக குழு தேர்தல் ஆலோசனை கூட்டம்; நாளை நடக்கிறது

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்தின் 2022-2025 நிர்வாககுழு தேர்தல் வருகிற 25-ந் தேதி நடக்கிறது, இதற்கான வாக்குபதிவு பாண்டவர்மங்கலம் காமராஜர்  இண்டர்நேஷனல் அகாடமியில் நடக்கிறது,

இதையொட்டி தேர்தல் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி பசுவந்தனை ரோடு காமராஜர் அரங்கத்தில் நாளை ஞாயிற்றுகிழமை காலை 11 மணிக்கு நடக்கிறது,

நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை தாங்குகிறார். துணை தலைவர் எம்,.செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ்குமார் , நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளரும், நகரசபை துணை தலைவருமான  ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். ரைட்வே குளோபல் மார்க்கெட்டிங் ஜி.சண்முகராஜா வரவேற்று பேசுகிறார்.

சிறப்பு விருந்தினர்களாக எம்.எஸ்,எம்,ஆர்,ராஜசேகர், என்,ராஜவேல் (ராஜன் மேட்ச் ஒர்க்ஸ்), எம்.எஸ்,எம்,ஆர்,

ஜெயப்பிரகாஷ்( மகாலட்சுமி மேட்ச் ஒர்க்ஸ்), ஆர்.எஸ்.சுரேஷ்(காமாட்சி மேட்ச் ஒர்க்ஸ்), எஸ்.எஸ்.டி.ஆர்.ரத்னாகரன்(ஸ்ரீ ஆர்,.கண்ணன் ரெகுலர் லாரி சர்வீஸ்), ஆர்.நெல்லையப்பன்(அரசன் அன் கோ),ஜி,.ஜெசுமணி (ஆரா செல்டர்ஸ்) ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்தின்போது ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமையிலான அணியின் வெற்றிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படும்,

வக்கீல்கள் ஏ.செல்வம், ஜே.ரத்தினராஜா ஆகியோர் சட்ட ஆலோசனை வழங்குகிறார்கள். முடிவில் நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கே.கண்ணன் நன்றி கூறுகிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *