வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் குறித்து அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் “தமிழ்நாடு முழுவதும் ஏற்கனவே வங்கி கணக்கு இருப்பவர்கள் குறித்த விவரங்களை கேட்டு பெற வேண்டும். சுமார் 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. எனவே அவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பூஜ்ஜியம் இருப்பு கணக்கு தொடங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.மண்டல பதிவாளர்களுக்கு இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீராவிபட்டி பகுதியைச் சேர்ந்த கவுண்டமணி மகன் அழகுராஜ் (வயது 30) என்பவர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த 2015 ஆண்டு பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து அழகுராஜை கைது செய்தனர். அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலெட்சுமி புலன் விசாரணை செய்து கடந்த […]
கரிசல் இலக்கியத்தின் தந்தை. மறைந்த எழுத்தாளர் `கி.ரா’ என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக கோவில்பட்டியில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது..கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் காலியாக இருந்த இடத்தில் இந்த மண்டபம் ரூ.1கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது.இதற்கான பணிகள் முடிவடைந்து நாளை திறப்பு விழா நடைபெறுகிறது. முதல் அமைச்சர் மு.க,ஸ்டாலின் இந்த மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார், இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார், அவருடன் […]
தமிழகம் வந்தபோது பிரதமர் பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை; அண்ணாமலை புகாருக்கு டி.ஜி.பி.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் சுற்றுப்பயணம் வந்தார். அப்போது, அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி கொடுத்தார்.மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக கவர்னரை சந்தித்தும் மனு கொடுத்துள்ளதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது, அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் […]