பாலியல் வன்புணர்ச்சி: வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

 பாலியல் வன்புணர்ச்சி: வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீராவிபட்டி பகுதியைச் சேர்ந்த கவுண்டமணி மகன் அழகுராஜ் (வயது 30) என்பவர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த 2015 ஆண்டு பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து அழகுராஜை கைது செய்தனர். அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலெட்சுமி புலன் விசாரணை செய்து கடந்த 6.7.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமனுஜம், நேற்று குற்றவாளியான அழகுராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜர் ஆனார்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *