• June 7, 2025

Month: November 2022

தூத்துக்குடி

திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை; உடனே அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அதில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர். பக்தர்கள் மட்டுமல்லாமல், அர்ச்சகர்கள் உட்பட யாரும் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது . தடை உத்தரவை மீறி யாராவது செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்து […]

செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் இணைவதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது- எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-பொதுக்குழுவில் 2 ஆயிரத்து 500 பேர் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கினோம். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறியுள்ளார்.சட்ட விதிகளின்படி 2 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் சேர்ந்து முடிவு எடுத்தது. இதனால் அவர் இணைவதற்கு எந்த […]

தூத்துக்குடி

எக்ஸ்ரே கண்டுபிடிப்பு தினம்: கேக் வெட்டி கொண்டாட்டம்

எக்ஸ்ரேவின் தந்தை வில்ஹெல்ம் ரான்ட்ஜென் எக்ஸ்ரே கண்டுபிடித்த தினமான நவம்பர் 8-ம் தேதி சர்வதேச கதிரியக்க தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் நுண்கதிர் துறை தலைவர் டாக்டர் புளோரா நெல்சன் கேக் வெட்டினார், ]மருத்துவர்கள், நுண்கதிர்வீச்சாள பணியாளர்கள், நோயாளிகளுக்கு கேக் வழங்கி பேசினார்.டாக்டர் புளோரா நெல்சன் பேசுகையில் கூறியதாவது:-நவீன மருத்துவ முன்னேற்றத்துக்கு எக்ஸ் கதிர்களின் கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும். உலகமே கொரோனா தொற்றினால் பரிதவித்த […]

தூத்துக்குடி

குறுஞ்செய்தி மூலம் லிங்க் அனுப்பி 2 பேரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ. 3.20

தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகைரச் சேர்ந்த தங்கபாண்டியன் மகன் ஜோன்ஸ் என்பவருக்கு அவருடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்ட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய KYC Update செய்ய வேண்டும் என்று கூறி அவருடைய செல்போனுக்கு லிங்க்குடன் குறுஞ்செய்தி வந்துள்ளது.அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து ஜோன்ஸ் தன்னுடைய இன்டெர்நெட் பேங்கிங் பயனாளர் பெயர் (Username), கடவுச்சொல் (Password) மற்றும் OTP ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவருடைய வங்கிகணக்கில் இருந்து ரூ.1,24,500/- பணம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜோன்ஸ் National […]

செய்திகள்

கண்பார்வையற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ; திருநெல்வேலி உதவி ஆட்சியராக பதவி ஏற்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரின் மகன் எஸ்.கோகுல். இவர் 26 வயதான இவர் திருநெல்வேலி மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.முதுகலைப்படிப்பில் எம்.ஏ., ஆங்கிலம் படித்துள்ள கோகுல், கண்பார்வையற்றவர். 2021 ஆம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக பதவி ஏற்று இருக்கிறார்.ஆட்சியர் வே.விஷ்ணு ,முன்னிலையில் கோகுல் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்ற கோகுலுக்கு ஆட்சியர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பிரம்மசக்தி தேர்வு

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக சத்யா, துணைத்தலைவராக செல்வக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தனர்.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், துணைத்தலைவர் செல்வக்குமார் தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் சில மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்ததையடுத்து அ.தி.மு.க. பலம் குறைந்தது.இதை தொடர்ந்து எதிர்க்கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் சத்யாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கிலும் தீர்வு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புற்று கோவிலில் அன்னாபிஷேகம்

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.கணபதி பூஜையுடன் தொடங்கி விநாயகர், முருகன் சுவாமி அம்பாள், சப்த கன்னி கால பைரவர் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங் சுவாமிக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து தீபாரதணை நடைபெற்றது பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். கோவில்தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன்,நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் […]

செய்திகள்

27 மாவட்ட விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதி கடைசி

சம்பா, தாளடி, பிசான பருவ நெற்பயிரை நவம்பர் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தஞ்சை, நாகை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு நவம்பர் 15-ம் தேதியும், குமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களுக்கு டிச.15-ம் தேதியும் காப்பீடு செய்ய கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி

கயத்தாறு ம.தி.மு.க. நிர்வாகி கொலைக்கான காரணம் என்ன? வாலிபரை பிடித்து விசாரணை

கோவில்பட்டி அருகே கயத்தாறு வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் என்ற கோடாங்கி மாரி (வயது 52). விவசாயியான இவர் தென்னக மானாவாரி விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளராகவும், ம.தி.மு.க. ஒன்றிய விவசாய அணி செயலாளராகவும் இருந்தார்.இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று வழக்கம்போல் மாரியப்பன் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் மாரியப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். […]

தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகம் சேமிப்பு கிடங்குகளில் கடத்தல் பொருட்கள் பதுக்கலா? ஊழியர்கள் புகார்

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இறக்குமதியாளர்கள் மூலம் டிப்பர் லாரிகளில் நிலக்கரி வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது,இதுபோல் பருப்பு உப்பு உள்ளிட்ட உணவு வகைகளும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான வேர் ஹவுஸ் குடோன்ககளுக்கு கொண்டு செல்லப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது,இந்நிலையில் துறைமுக இறக்குமதியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு தெரியாமல் சிலர் கூட்டாக நீண்ட காலமாக லாரிகள் மூலம் கடத்தல் பொருட்களையும் கொண்டு சென்று பதுக்கி வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாக துறைமுகத்தில் பணி செய்யும் ஊழியர்கள் புகார் […]