எக்ஸ்ரே கண்டுபிடிப்பு தினம்: கேக் வெட்டி கொண்டாட்டம்

எக்ஸ்ரேவின் தந்தை வில்ஹெல்ம் ரான்ட்ஜென் எக்ஸ்ரே கண்டுபிடித்த தினமான நவம்பர் 8-ம் தேதி சர்வதேச கதிரியக்க தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் நுண்கதிர் துறை தலைவர் டாக்டர் புளோரா நெல்சன் கேக் வெட்டினார், ]மருத்துவர்கள், நுண்கதிர்வீச்சாள பணியாளர்கள், நோயாளிகளுக்கு கேக் வழங்கி பேசினார்.
டாக்டர் புளோரா நெல்சன் பேசுகையில் கூறியதாவது:-
நவீன மருத்துவ முன்னேற்றத்துக்கு எக்ஸ் கதிர்களின் கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும். உலகமே கொரோனா தொற்றினால் பரிதவித்த போது இந்த துறை தான் மிகவும் மகத்தான பணி செய்து மக்களை காப்பாற்ற உதவியது.
மருத்துவ வரலாற்றில், இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல். விபத்து, எலும்பு முறிவு என்றால் மருத்துவர் பரிந்துரைக்கும் முதல் பரிசோதனை ‘எக்ஸ்-ரே’ தான். இதுதவிர, முழு உடல் பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பை கண்டறிய ‘எக்ஸ்-ரே’ பரிந்துரைக்கப்படும்.
‘எக்ஸ்-ரே’.நமது உடலில் உள்ள எலும்புகளுக்கோ நரம்புகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும், வயிற்றில் உள்ள கட்டிகள், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் கண்டறிய என பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளில் உதவுகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் பெரிதும் பயன்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியை ஜான்சிரானி தொகுத்து வழங்கினார். பீ.தவமணி பீட்டர் வரவேற்று பேசினார். இரா.ஆசீர் சுந்தர்சிங் நோயாளிகளுக்கு உதவுதல் பற்றி சிறப்புரையாற்றினார். டாக்டர் சி.சரவணன் நன்றி கூறினார்.
