• June 7, 2025

தூத்துக்குடி துறைமுகம் சேமிப்பு கிடங்குகளில் கடத்தல் பொருட்கள் பதுக்கலா? ஊழியர்கள் புகார்

 தூத்துக்குடி துறைமுகம் சேமிப்பு கிடங்குகளில் கடத்தல் பொருட்கள் பதுக்கலா? ஊழியர்கள் புகார்

இதுபோன்ற சேமிப்பு கிடங்கில் தான் கடத்தல் பொருட்கள் பதுக்கி வைப்பதாக புகார் எழுந்துள்ளது.


தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இறக்குமதியாளர்கள் மூலம் டிப்பர் லாரிகளில் நிலக்கரி வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது,
இதுபோல் பருப்பு உப்பு உள்ளிட்ட உணவு வகைகளும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான வேர் ஹவுஸ் குடோன்ககளுக்கு கொண்டு செல்லப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது,இந்நிலையில் துறைமுக இறக்குமதியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு தெரியாமல் சிலர் கூட்டாக நீண்ட காலமாக லாரிகள் மூலம் கடத்தல் பொருட்களையும் கொண்டு சென்று பதுக்கி வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாக துறைமுகத்தில் பணி செய்யும் ஊழியர்கள் புகார் கூறி வந்தனர்,
மேலும் அங்கு பணி செய்யக்கூடிய சிலரின் உதவியுடன் போலி ரசீதுகள் தயார் செய்து துறைமுகத்திற்கும் இறக்குமதியாளர்களுக்கும் தெரியாமல் பல நூறு கோடிகளில் முறைகேடுகள் செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.
எனவே இது குறித்து துறைமுக சபை நிர்வாகம், இறக்குமதியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துவதுடன் தூத்துக்குடியில் உள்ள 500க்கும் மேற்பட்ட வேர் ஹவுஸ்களில் கடத்தல் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் உரிய ஆய்வு செய்ய மேற்கொள்ள வேண்டும் என்று கோரி வந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி சிதம்பரநகர் முதல்தெருவை சேர்ந்த தனியார் கம்பெனி மேலாளா் சாகுல்ஹமீது (61) தெர்மல்நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மேலமருதூரில் உள்ள எங்கள் கம்பெனிக்கு லாரிகள் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது, இதில் போலி ரசீதுகள் தயார்செய்து முறைகேடுகள் நடப்பதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியிருந்தார்.
இந்நிலையில் துறைமுகத்தில் நிலக்கரி ஏற்ற வந்த டிப்பர் லாரி ஓட்டுனர்கள் கொடுத்த ரசீது குறித்து சந்தேகம் அடைந்த ஊழியா்கள் அது குறித்து அந்த லாரியை ஓட்டிவந்த டிரைவா்களிடம் கேள்வி எழுப்பினா், ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் இரண்டு லாரி டிரைவா்களும் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டனா்,’
அவா்கள் ஓட்டிவந்த லாரி துறைமுக நுழைவு வாயில் அருகே அப்படியே நிறுத்தப்படுள்ளது.
இதனால் துறைமுகத்தில் முறை கேடுகள் நடைபெறுவதாக வந்த புகார்கள் உறுதியாகியுள்ளதாக ஊழியா்கள் கூறியுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Digiqole Ad

Related post