மாணவர்களுக்கு நகைச்சுவை போட்டி; கோவில்பட்டியில் 12 ந்தேதி நடக்கிறது

கோவில்பட்டி என்.கே.மகாலில் மகிழ்வோர் மன்றம் சார்பில் வருகிற 12-ந்தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்கான நகைச்சுவை சொல்லும் போட்டி நடைபெறுகீறது.
போட்டிகள் 3 பிரிவுகளாக அதாவது எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்கள், 1 முதல் 5-ம வகுப்பு வரை, 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்த்தப்படுகிறது.
போட்டிக்கான விதிமுறைகள்:
- அரசியல், ஆன்மிகம் மற்றும் முகம் சுழிக்க வைக்கும் நகைசுவைகள் சொல்லகூடாது.
- கடி ஜோக்ஸ் சொல்லக்கூடாது.
- சொல்லும் விதம், உடல் பாவனை, வார்த்தைகளில் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும்.
- நடுவர்கள்தீர்ப்பே இறுதியானது.
- ஜோக்குகளும் சொல்லவேண்டும்.
- போட்டிக்கு வரும் மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்/ முதல்வர் கையொப்பம் பெற்ற கடிதத்துடன் வருகை தரவேண்டும்.
போட்டிகளில் வெற்றி பெறும் ,முதல் மூன்று பெறுவோர் மற்றும் பங்களிப்போர் அனைவருக்கும் சான்றிதல் வழங்கப்படும்.
மேற்கண்ட தகவல்களை மகிழ்வோர் மன்ற இயக்குனர்கள் மற்றும் காப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்,
