27 மாவட்ட விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதி கடைசி நாள்

சம்பா, தாளடி, பிசான பருவ நெற்பயிரை நவம்பர் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தஞ்சை, நாகை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு நவம்பர் 15-ம் தேதியும், குமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களுக்கு டிச.15-ம் தேதியும் காப்பீடு செய்ய கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
