• June 7, 2025

Month: October 2022

செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு : உதவி ஆணையர் – 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

சென்னை தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.இதன் அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டதுதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிச் […]

தூத்துக்குடி

காவலர் வீர வணக்க நாள்: துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை

லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.கடல் மட்டத்திலிருந்து 16 அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலையத்தில் ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து மணிமண்டபத்திற்கு இடம் தேர்வு : அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடியில் ரோச் பூங்காவில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் நகரின் மையப்பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பரதர் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு சமூக அமைப்பினருடனான கலந்தாலோசனை கூட்டம் ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-தூத்துக்குடி ரோச் […]

கோவில்பட்டி

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் தீபாவளியை முன்னிட்டு வேலாயுதபுரம் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ,அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் மகேஷ் பாலா தலைமை தாங்கினார், முத்துமாரியப்பன், குமார், இந்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜின்னிஷா பேகம், குழந்தைகள் நல பணியாளர் ஷபீனா ஆகியோர் வரவேற்றனர்.விழா ஏற்பாடுகளை நகர நிர்வாகிகள் ஜோதிகாமாட்சி, முருகன் செய்திருந்தனர், விழா முடிவில் மகாலிங்கம் நன்றி கூறினார்.

செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் உதயமான தினம்: கோவில்பட்டியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தூத்துக்குடி ஆகும்.திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளை பிரித்து 1986 ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி அன்று வ.உ. சிதம்பரனார் பெயரால் தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் உதயமான தினத்தை முன்னிட்டு இன்று கோவில்பட்டி ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கம் மற்றும் 5-வது தூண் அமைப்பின் சார்பில் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மக்களிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.அந்த அறிக்கை நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அப்போதைய கலெக்டர் உள்ளிட்ட 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் […]

செய்திகள்

காங்கிரஸ் கட்சியில் எனது பங்கு என்ன என்பதை கட்சி தலைவர்தான் முடிவு செய்வார்-ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான, 3,570 கி.மீ., துாரம், ‘ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரிலான நடை பயணத்தை காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி சமீபத்தில் தொடக்கினார்.தமிழகத்தின் கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி , கேரளா, கர்நாடகாவை கடந்து நேற்று ஆந்திராவிற்குள் வந்தார்.கர்நூல் மாவட்டத்தில், காங்கிரஸ் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, 42 வது நாளான, இன்று ஆந்திராவில் விஜய நகரம் மாவட்டத்தில் சாகி கிராமம் முதல் பனவாசி கிராமம் வரை ராகுல்காந்தி […]

செய்திகள்

அதிக வாக்குகள் பெற்றார் : காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது.மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். ஓட்டு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாணவர் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணிக்கு பரிசு கோப்பை

கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட அளவில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர் களுக்கான கால்பந்து போட்டி நடந்தது. போட்டியில் 13 அணிகள் கலந்து கொண்டன.இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் அணியும், கோவில்பட்டி அப்துல் கலாம் அணியும் மோதியது. இதில் காயல்பட்டினம் அணி 5 – 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3 மற்றும் 4 வது இடத்திற்கான போட்டியில் நெல்லை பெல்ஸ் பள்ளி அணியும், கோவில்பட்டி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஆக்கி போட்டி: எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணி முதலிடம்

கோவில்பட்டியிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கி போட்டி 2 நாட்கள் நடந்தது.போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 கல்லூரி அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கோவில்பட்டி எஸ். எஸ். டி. எம். கல்லூரி அணியும், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின.பரபரப்பான இந்த ஆட்டத்தில் எஸ். எஸ். டி. எம். கல்லூரி அணி 4-2 என்ற கோல் […]