• June 7, 2025

தூத்துக்குடி மாவட்டம் உதயமான தினம்: கோவில்பட்டியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

 தூத்துக்குடி மாவட்டம் உதயமான தினம்: கோவில்பட்டியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தூத்துக்குடி ஆகும்.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளை பிரித்து 1986 ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி அன்று வ.உ. சிதம்பரனார் பெயரால் தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் உதயமான தினத்தை முன்னிட்டு இன்று கோவில்பட்டி ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கம் மற்றும் 5-வது தூண் அமைப்பின் சார்பில் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஏ.வி. மேல்நிலைப்பள்ளி மைதானம் ‌ ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மரக்கன்று நடும் நிகழ்ச்சியை 5-வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் செந்தில் குமார், நல்லதம்பி, சரவணன் மற்றும் தங்கப்பூ, ஜெயபிரகாஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டம் உதயமான தினம் கொண்டாடடப்பட்டது. இதையொட்டி அலுவலக நுழைவு வாயிலில் நகராட்சி பெண் பணியாளர்கள் வண்ண கோலமிட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *