தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 3 ம் கேட் ரெயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டிருந்த பழுதை சரி செய்ய சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.இதன் காரணமாக கடந்த 12 நாட்களாக பாலம் மூடப்பட்டு போக்குவரத்து, 4வது ரயில்வே கேட் மற்றும் 2ம் கேட் வழியாக மாற்றி விடப்பட்டது. பிரதான சாலை மூடப்பட்டதால் நகரில் பல பகுதிகள் போக்குவரத்து நெருக்கடியில் தவித்தன. நீண்ட தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. […]
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.10 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள்
தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு உரங்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திரேஸ்புரம் கடற்கரை வேனில் இருந்து படகிற்கு மூட்டைகள் ஏற்றப்பட்டு கொண்டு இருந்தது.போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 50 உர மூட்டைகள் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 […]
கோவில்பட்டி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-உள்நாடு மற்றும் வெளிநாட்டு தபால்களை பொதுமக்களுக்கு குறைந்த செலவில் குறிபிட்ட நேரத்தில் சென்றடையும் வண்ணம் அஞ்சலகங்களில் பதிவு, விரைவு மற்றும் பார்சல் சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன,பொதுமக்களுக்கு வசதியாக இந்த சேவை நேரத்தை குறிப்பிட்ட அஞ்சலகங்களில் நீட்டித்து வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் மற்றும் தென்காசி ரெயில் நிலைய அஞ்சலகத்தில் மாலை 6.30 வரையிலும், கடையநல்லூர் துணை […]
தூத்துக்குடியில் ரெயில்வே மேம்பாலம் பழுதுபார்ப்பு பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்
தூத்துக்குடி புது பஸ் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் இன்று பார்வையிட்டார். அவருடன் அதிகாரிகள் சென்று இருந்தனர்.2010-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக பள்ளி விடுமுறை நாட்களில் வேலை செய்வது என முடிவு செய்து அப்பணிகள் நடைபெற்று வந்தன.11-ந்தேதி பணிகள் முடிந்து திறக்கப்படும் என்று அறிவிக்க்ப்பட்டிருந்த நிலையில் மேலும் சில நாட்கள் பணி நீட்டித்து தற்போது முடியும் தருவாயில் உள்ளது.இன்று (புதன்கிழமை) […]
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல்பட்டு வந்த https://www.meenakshitemple.org அதிகாரப்பூர்வ இணையதளம் நேற்று முதல் திடீரென முடங்கியது.இந்த இணையதளத்தில் கோவிலில் திருவிழா கோயிலின் வரலாறு கோவில் சிறப்பு, சிறப்பு கட்டணம் மற்றும் ஆன்லைன் மூலம் பிரசாதம் வாங்குதல் உள்ளிட்ட வசதிகள் இந்த இணையதளத்தில் இடம் […]
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்த லாட்டரி வியாபாரியான ரோஸ்லின் (வயது 50) மற்றும் தமிழகத்தின் தர்மபுரி மாவட்ட பகுதியை சேர்ந்த பத்மா (54) என்ற மற்றொரு லாட்டரி வியாபாரி என மர்மமான முறையில் 2 பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.இதில், 2 பேரும் கொடூர முறையில் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் முகமது ஷபி என்ற ஷிகாப்பு (வயது 48), திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை […]
சென்னை அம்பத்தூர் வைகை தெருவை சேர்ந்த 17 வயது மாணவர் பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர காத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி கிருஷ்ணகுமார் தனது நண்பர்களுடன் சென்னை, மாநில கல்லூரிக்கு கலந்தாய்வுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார்.அதன் பிறகு கிருஷ்ணகுமார் வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்சொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த பெற்றோர் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு […]
கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட உள்ளது.அதன்படி 8 துணை மின்நிலையமும், மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் அதற்கு உட்பட்ட பகுதிகளும் வருமாறு:-கழுகுமலை:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி,குருவிகுளம்.கோவில்பட்டி:- கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, லட்சுமிமில் […]
தூத்துக்குடியில் பிடிபட்ட இங்கிலாந்து கடத்தல்காரரிடம் குற்றப்பத்திரிகை நகல் ஒப்படைப்பு; 26-ந் தேதி விசாரணை
தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (வயது 47) என்பவரை கியூ பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி மடக்கி பிடித்தனர். அவர் மும்பையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்று உள்ளார். இது குறித்து கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோனதன் தோர்னை கைது […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமப்புறங்களில் ஊதா நிற குழாய்கள் வரிசையாக வீடுகளுக்குள் புகுந்து இருப்பதை பார்க்க முடிகிறது. இவை அனைத்தும் சாத்தியமானது, ஜல் ஜீவன் மிஷன் என்னும் உயிர்நீர் இயக்கத்தால்தான். இந்த உன்னத திட்டம் 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது.2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் என்ற இலக்கோடு, 2019-ம் ஆண்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும், 2020-21-ம் ஆண்டில்தான் தூத்துக்குடி மாவட்டத்தை எட்டியது. அந்த ஆண்டே வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான […]