நரபலிக்கு முன்பு நிர்வாண வழிபாடு நடத்திய கேரள தம்பதி-இடைத்தரகர்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்த லாட்டரி வியாபாரியான ரோஸ்லின் (வயது 50) மற்றும் தமிழகத்தின் தர்மபுரி மாவட்ட பகுதியை சேர்ந்த பத்மா (54) என்ற மற்றொரு லாட்டரி வியாபாரி என மர்மமான முறையில் 2 பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், 2 பேரும் கொடூர முறையில் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் முகமது ஷபி என்ற ஷிகாப்பு (வயது 48), திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்த வைத்தியர் பகவல் சிங் என்ற பகவந்த் (வயது 55), பாரம்பரிய மசாஜ் சிகிச்சை நிபுணரான இவரது மனைவி லைலா (வயது 52) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது
பகவந்துக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இருந்த அவர், முகமது ஷபியின் அறிமுகம் ஏற்பட்ட பின்பு, பெண்களை நரபலி கொடுக்கும் செயலில் இறங்கி உள்ளார். இதற்காக இரண்டு முறை தனித்தனியே முகமது ஷபி, ரூ.10 லட்சம் பணம் பெற்று உள்ளார். வாழ்க்கையில் திடீர் பணக்காரர்களாக ஆக ஆசைப்பட்டு 2 பெண்களை நரபலி கொடுத்த பகவந்த், லைலா மற்றும் இடைத்தரகர் முகமது ஷபி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து திருவல்லாவில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை வெளியே எடுத்து, அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், கேரள தம்பதியிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில், 3-வது குற்றவாளியான ரஷீத் என்ற முகமது ஷபி, கேரள தம்பதிக்கு பல ஆலோசனைகளை கூறி தன்வசியப்படுத்தி வைத்து உள்ளார்.
நரபலி கொடுக்கும்போது, பெண்களின் ரத்தம் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றை கண்டு ஷபி பரவசமடைந்து உள்ளார். விசாரணையின்போது, குற்றவாளியான லைலா எந்தவித அச்ச உணர்வும், நடுக்கமும் இன்றி காணப்பட்டு உள்ளார். நரபலி கொடுத்த பின்னர் வெற்றி வரும் என நினைத்துள்ள அந்த தம்பதி தினசரி பூஜையிலும் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக வீட்டில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
ஒரு கட்டத்தில் பக்வால் சிங்கின் மனைவியுடன் ஷபி பாலியல் உறவு வைத்து உள்ளார். இதனை பார்த்த பின்னர், பக்வால் சிங் வழிபாடு நடத்தியுள்ளார். பூஜைகள் முடிந்து, விளக்கேற்றியதும், லைலா மற்றும் ஷபி இருவரும் பாலியல் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். அந்த தம்பதியிடம், மனித கறியை உண்பது வாழ்நாளை நீட்டிக்கும் என ஷபி கூறியுள்ளார். இதனை கேட்டு, நரபலி கொடுத்த பின்னர் மனிதகறியை அவர்கள் உண்டுள்ளனர்.
இதில், ரோஸ்லின் உடலில் இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள கறியை துண்டாக்கி லைலா உண்டுள்ளார். இதனை ஷபி கூறியுள்ளார். இதுபற்றி லைலாவிடம் விசாரித்தபோது, இளமை பொலிவு நீடிக்க பத்மாவின் பிறப்புறுப்புக்களை பக்வால் சிங் உட்கொண்டார் என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.
இரு பெண்களின் உடலின் பாகங்கள் உருக்குலைந்து போயுள்ளன. இந்த சம்பவத்தில் அறிவியல் பரிசோதனைகள், மரபணு பரிசோதனை உள்ளிட்டவை நடத்தப்பட வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் ரூ.10 லட்சம் தரப்படும் என வாக்குறுதி கூறி, அழைத்து வரப்பட்ட ரோஸ்லினை படுக்கையில் நிர்வாண நிலையில் கால்களை கட்டி போட்ட நிலையிலும் கூட, தன்னை நடிக்க வைக்கிறார்கள் என அவர் நினைத்து உள்ளார்.
கேரள தம்பதி உள்ளிட்ட குற்றவாளிகள் 3 பேரும் நிர்வாண வழிபாட்டிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த வழக்கில் வெளியில் கூற முடியாத அளவுக்கு பல கொடூர செயல்களில் ஷபியின் அறிவுரையின்பேரில், தம்பதி ஈடுபட்டு உள்ளனர் என கொச்சி நகர காவல் ஆணையாளர் சகிலம் கூறியுள்ளார். இவ்வளவு நடந்த பின்பும், செல்வம், பணம் வராத நிலையில், இன்னும் கூடுதலாக நரபலி கொடுக்க தயாரான, இரக்கமற்ற நிலையிலேயே லைலா காணப்பட்டு உள்ளார் என்றும் கூறி போலீசார் அதிர்ச்சி அடைய வைத்து உள்ளனர்.
ஏனெனில், கடந்த ஜூனில், இதே கேரள தம்பதி அவர்களது வீட்டில் வைத்து மற்றொரு பெண்ணையும் நரபலி கொடுத்து உள்ளனர் என புதுப்புது தகவல்களையும் போலீசார் கூறியுள்ளனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே கைதான கணவர்-மனைவி மற்றும் இடைதரகர் ஆகிய 3 பேரும் எர்ணாகுளம் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டுக்கு இன்று அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மூவருக்கும் வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. இதன்பின் அவர்கள் 3 பேரும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன் வந்த செய்தியையும் படிங்க… https://tn96news.com/?p=9604(opens in a new tab)
