தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 161 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.மேலும், 51 துணை மின் நிலையங்களில் 602 எம்.வி.ஏ அளவிற்கு திறன் உயர்த்தி 97 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எபின் (வயது 36). இவர் தாராபுரத்தில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடி ஏற்றி ஒற்றுமையை வகைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் பள்ளி ஆசிரியர் தேசிய கொடியில் இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும் […]
எதிர்க்கட்சிகளை பழி வாங்குவதற்காக காவல்துறை பயன்படுத்தப்படுகிறது ; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வை வலியுறுத்தியும் பேச்சுவார்த்தையில் உழியர்களுக்கான குழுவில் அண்ணா தொழிற்சங்கம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.சென்னை பல்லவன் சாலையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- […]
புலி படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்தில் 15 கோடி மறைத்ததாக அவர் மீது வருமான வரித்துறை ரூ. 1.5 கோடி அபராதம் விதித்தது. அதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மேலும் வழக்கு தொடர்பாக செப்டம்பர் 16ம் தேதிக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு […]
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு லெனின் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன்- கருப்பசாமி திருக்கோயில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி அன்று நாள்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று ஆடி கடைசி செவ்வாய்கிழமை காலையில் பால்குடம் ஊர்வலம், அக்கினி சட்டி ஊர்வலமும், அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது, இதில் கோயில் பூசாரி ஜோதி, கோவில் தலைவி பாக்கியலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
1,2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது- ஐகோர்ட்டு தடையை அமல்படுத்த பள்ளிகல்வித்துறை உத்தரவு
1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும்படையினர் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவல்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆய்வுக்கு பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி வேலாயுதபுரம் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திரதின விழா நிகழ்ச்சி குழந்தைகள் நல மையத்தில் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கான மாறுவேடப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நற்பணி மன்ற மாவட்ட துணை தலைவரும் கவுன்சிலருமான தவமணி , கவுன்சிலர் லவராஜா ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள். வேலாயுதபுரம் மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார்நிகழ்ச்சியில் வைரசாமி நாடார், ஜெயமாரியப்பன், சிலம்பம் ஆசிரியர்கள் கணபதி, சோலை நாராயணன், தினேஷ், கனகலட்சுமி, […]
சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் “1,58,157 பேருக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்முடி கூறியதாவது:-மாணவர்கள் http://tneaonline.org இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம் .வரும் 20 முதல் 23-ம் தேதி வரை 7.5% இட ஒதுக்கீட்டுப் பிரிவு, சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் 25 முதல் அக்டோபர் 21 வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் […]
கோவில்பட்டி நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி கொடியேற்றி சிறப்புரையாற்றினார். விழாவிற்கு ஆணையாளர் ராஜாராம் தலைமை வகித்தார், நகர மன்ற துணைத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் முன்னிலை வகித்தார்.நகராட்சி பொறியாளர் ரமேஷ், நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன், மேலாளர் பெருமாள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், கணேசன், வள்ளி ராஜ், […]
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரிகளின் சார்பில் நடைபெற்ற சுதந்திர விழாவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-கேள்வி:- டிடிவி தினகரன் அ.தி.மு.க.வில் குறித்து பொதுக்குழுவில் எதுவும் பேசவில்லை என்றும் ஒருங்கிணைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளாரே. பதில்;- புரட்சித்தலைவரின் சின்னம் இரட்டை இலை. இதற்கு ஒரு மகத்தான வெற்றியைத் தேடித் தந்தவர் புரட்சித்தலைவி அம்மா. அந்த […]