• June 7, 2025

Month: July 2022

கோவில்பட்டி

கோவில்பட்டி கோட்டத்தில் 12-ந்தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகள்

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய பகுதிகளில் உயர் அழுத்த மின் பாதைகளில் மின் கம்பங்களுக்கு இடையே உள்ள அதிகமான இடைவெளிகளில் புதிய மின்கம்பங்கள் நடும் பணிகள் 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருக்கிறது.எனவே, அன்றையை தினம் காலை 9 மணி மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரம்:கோவில்பட்டி உப மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் இளையரசனேந்தல் ரோடு இ.பி. ஆபீஸ் வரை மேற்குப் பகுதிகளுக்கும், இந்திரா நகர் வடக்கு தெற்கு பகுதிகள், சீனிவாச […]

செய்திகள்

அ.தி,மு.க.அலுவலகத்துக்கு `சீல்’வைப்பு

அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் வலுத்தவுடன் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவரில் யார் அந்த ஒற்றையர் என்ற கேள்வி எழுந்தது.பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தது. இதனால் பொதுக்குழுவை கூட்ட ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார், மேலும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதுவழக்கு விசாரணையின் பொது பொதுக்குழு கூட்டத்துக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது.இதை தொடர்ந்து இன்று காலை அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் நடந்தன. ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பொதுக்குழுவில் ஏற்கனவே பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்டிருந்த ஜெயலலிதா […]

கோவில்பட்டி

312-வது பிறந்த நாள்: அழகுமுத்துக்கோன் சிலைக்கு கனிமொழி, அமைச்சர்கள் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நலாட்டின்புத்தூர் கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் நினைவு மண்டபத்தில் அன்னாரது 312வது பிறந்த நாள் விழா தமிழக அரசின் சார்பில் நடைபெற்றது.விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி , அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து வீட்டுமனை ஒப்படைக்கான இணையவழிப்பட்டா 64 பேருக்கும், […]

செய்திகள்

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்; பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்த நீக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.அப்போது பேசிய மூத்த தலைவர் கே.பி.முனுசாமி “பொதுக் குழு உறுப்பினர்களாகிய நீங்கள் உங்களின் உணர்வுகள் தெரிவித்து வருகிறீர்கள். 1.50 கோடி தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலித்து வருகிறீர்கள். உங்களுடைய உணர்வுகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு […]

தூத்துக்குடி

பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

தூத்துக்குடி தாளமுத்துநகர் 6 வது தெருவைச் சேர்ந்த மாடசாமி மனைவி நந்தினி (வயது 28) என்பவர் நேற்று (10.7.2022) இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த தாளமுத்துநகர் ராமதாஸ் நகரை சேர்ந்த முத்துமுகமது மகன் நாகூர் மீரான் (22) என்பவர் நந்தினி அணிந்திருந்த தங்க நகையை பறித்து விட்டு தப்பினார்.இதை பார்த்த அந்த பகுதியினர் அந்த நபரை விரட்டி சென்று கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். நந்தினி […]

செய்திகள்

நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது; இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து சென்னை வானகரத்தில் இன்று திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு இன்று கூடியது.பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 6.45 மணியளவில் பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு காரில் சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை வாகனத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கு சென்றார். வீட்டில் […]

செய்திகள்

அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் மோதல்- கதவுகள் உடைப்பு; போலீஸ் தடியடி

சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், ஓ.பன்ன்னீர் செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சென்றார். அந்த சமயத்தில் தலைமை அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன.அங்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூடி இருந்தனர், அப்போது அங்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.இருதரப்பு ஆதரவாளர்களும் கல்வீச்சில் ஈடுபட்டனர். மேலும், அ.தி.மு.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. எடப்பாடி பழனிசாமி படங்கள் இருந்த பதாகைகளுக்கு […]

தூத்துக்குடி

தூத்துக்குடி நெய்தல் கலைவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நாளை (7.7.2022) முதல் 10.7.2022 வரை 4 நாட்கள் நெய்தல் கலை விழா நடக்கிறது. இந்த நாட்களில் கைவினை கலைஞர்களின் கண்காட்சிகள், பராம்பரிய உணவு திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. நாளை தொடங்கவுள்ள நெய்தல் கலை விழா நிகழ்ச்சிகான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (6.7.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ள வ.உ.சி கல்லூரி […]

தூத்துக்குடி

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்; போலீஸ் சூப்பிரண்டிடம் 34 பேர் மனு .

தமிழக அரசு உத்தரவுப்படி இரு வாரங்களுக்கு ஒருமுறை முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இம்மாதத்தின் முதல் புதன் கிழமையான இன்று (6.7.2022) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் 34 பேர் தங்கள் குறைகளை போலீஸ் சூப்பிரண்டு எல். பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு […]