312-வது பிறந்த நாள்: அழகுமுத்துக்கோன் சிலைக்கு கனிமொழி, அமைச்சர்கள் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நலாட்டின்புத்தூர் கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் நினைவு மண்டபத்தில் அன்னாரது 312வது பிறந்த நாள் விழா தமிழக அரசின் சார்பில் நடைபெற்றது.
விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி , அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து வீட்டுமனை ஒப்படைக்கான இணையவழிப்பட்டா 64 பேருக்கும், மின்னணு குடும்ப அட்டை 81 பேருக்கும் என மொத்தம் 145 பேருக்கு ரூ.54.40 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
விழாவில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மீரா நாராயணசாமி, ஊராட்சி மன்றத்தலைவர் தா.சேசுபால்ராயன் தம்பா, துணைத்தலைவர் தா.மாரியம்மாள், வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர்கள் அழகுமுத்தம்மாள், மீனாட்சிதேவி, சின்னத்துரைச்சி, ராஜேஸ்வரி, வனஜா, ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
