பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

தூத்துக்குடி தாளமுத்துநகர் 6 வது தெருவைச் சேர்ந்த மாடசாமி மனைவி நந்தினி (வயது 28) என்பவர் நேற்று (10.7.2022) இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த தாளமுத்துநகர் ராமதாஸ் நகரை சேர்ந்த முத்துமுகமது மகன் நாகூர் மீரான் (22) என்பவர் நந்தினி அணிந்திருந்த தங்க நகையை பறித்து விட்டு தப்பினார்.
இதை பார்த்த அந்த பகுதியினர் அந்த நபரை விரட்டி சென்று கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். நந்தினி அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து நாகூர் மீரானை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 3 சவரன் தங்க நகை மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்
