தூத்துக்குடியில் கொரோனா தொற்று தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் இலவச தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை காலை தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர […]
தூத்துக்குடி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த ஜெயசுந்தர் (வயது 50) என்பவர் அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் லயன்ஸ் டவுன் ஜங்ஷன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது புல்லட்டில் வந்த மர்ம நபர்கள் ஜெயசுந்தரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றனர்.இதுகுறித்து ஜெயசுந்தர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரம் பகுதியை […]
நடப்பு ஆண்டிற்கான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடைபெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் 360 பேர், அரசூர் வி.வி. பொறியியல் கல்லூரியில் 1008 பேர், தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அழகர் பப்ளிக் […]
ஜாதி உணர்வை தூண்டக்கூடிய பொருட்கள் விற்கவேண்டாம்; வணிகர்கள் நடவடிக்கைக்கு காவல் கண்காணிப்பாளர் நன்றி
தூத்துக்குடி மாவட்டத்தை குற்றங்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்.மேலும் ஜாதிய பதற்றங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குள் ஊடுருவி, அதன் மூலம் கொடிய மோதல்கள் உருவாகுவதற்கு முக்கிய காரணியாக ஜாதி நூல், ஸ்டிக்கர், டி-சர்ட் போன்றவை அமைந்துள்ளது. தற்போது குழந்தைகளுக்கும், அவர்கள் வளரும் காலத்திலேயே ஜாதிய அடையாளத்தை வலியுறுத்தும் சக்தியாக அவைகள் இருப்பதை சமீபத்திய நிகழ்வுகள் மூலம் உணர்ந்து, அவற்றை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு ‘மாற்றத்தை தேடி” […]
தூத்துக்குடி நூலகத்தில் 17-ம் தேதி நடக்கிறது டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு! தூத்துக்குடி நூலகத்தில் 17-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு வருகிற 17-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள், 94880 71114, 99523 […]
தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே உள்ள கிராமமான செட்டிமல்லன்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் வேல்முருகன் (வயது 32). லாரி டிரைவர். இவரது மனைவி கற்பகவல்லி (27). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.காலப்போக்கில் வேல்முருகன், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.இந்நிலையில் இன்று காலை வேல்முருகன், மனைவியை சராமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ […]
தூத்துக்குடி தாளமுத்துநகர் 6 வது தெருவைச் சேர்ந்த மாடசாமி மனைவி நந்தினி (வயது 28) என்பவர் நேற்று (10.7.2022) இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த தாளமுத்துநகர் ராமதாஸ் நகரை சேர்ந்த முத்துமுகமது மகன் நாகூர் மீரான் (22) என்பவர் நந்தினி அணிந்திருந்த தங்க நகையை பறித்து விட்டு தப்பினார்.இதை பார்த்த அந்த பகுதியினர் அந்த நபரை விரட்டி சென்று கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். நந்தினி […]
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நாளை (7.7.2022) முதல் 10.7.2022 வரை 4 நாட்கள் நெய்தல் கலை விழா நடக்கிறது. இந்த நாட்களில் கைவினை கலைஞர்களின் கண்காட்சிகள், பராம்பரிய உணவு திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. நாளை தொடங்கவுள்ள நெய்தல் கலை விழா நிகழ்ச்சிகான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (6.7.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ள வ.உ.சி கல்லூரி […]
தமிழக அரசு உத்தரவுப்படி இரு வாரங்களுக்கு ஒருமுறை முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இம்மாதத்தின் முதல் புதன் கிழமையான இன்று (6.7.2022) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் 34 பேர் தங்கள் குறைகளை போலீஸ் சூப்பிரண்டு எல். பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் மாரிப்பாண்டியன். இவர் சென்னையில் ஒரு சுவீட் கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாரித்தாய். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3-வது மகள் மகாலட்சுமி (வயது 1). நேற்று மாலை மாரித்தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். குழந்தை மகாலட்சுமி விளையாடிக் கொண்டிருந்தது. மூத்த பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கூடம் சென்று வந்திருந்தனர். சிறிது நேரம் கழித்து குழந்தை மகாலட்சுமியை காணவில்லை. அவள் அக்காள்களுடன் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
