தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி மரணமடைந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இது தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.கோர்ட்டு உத்தரவால் மாணவியின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி […]
நடிகரும் இலட்சிய தி.மு.க. தலைவருமான டி ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக ஜூன் 14 ந்தேதி அமெரிக்கா சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தார்.வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும், கால்டுவெல் ஆகியோர் டி.ராஜேந்தரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.பூரண நலம் பெற்றதை தொடர்ந்து டி.ராஜேந்தர் சென்னை புறப்பட்டார். குடும்பத்தினருடன் ஜூலை 22 (நாளை) அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார். விமான […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்ராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது.இதையடுத்து பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார்.அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.மேலும், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்க கூடாது எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.இந்த […]
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் 21-வது நினைவுநாளை முன்னிட்டு,இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் முன்னிலையில், சிவாஜி கணேசன் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, சுமதி அன்பரசு, மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன், கலைப்பிரிவு நிர்வாகிகள் சுப்பிரமணியன், வேதா, மயிலை அசோக், சுரேஷ்பாபு, சூளை ராஜேந்திரன், சந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக சென்னை, அடையாரிலுள்ள […]
சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம் நுழைந்தார். இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால், வருவாய் துறை அதிகாரிகள் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 14 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் […]
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின்போது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அவரது வீட்டிற்குள் போலீசார் நுழைந்து கைது செய்தது மனித உரிமை மீறிய செயல் என்பதை சுட்டிக்காட்டி டி.ஜெயக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.பசுமை வழி சாலையில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று நேரில் சாட்சியம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-கடந்த பிப்ரவரி […]
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அடையார் பார்க் ஓட்டலில் ஞாயிற்றுகிழமை மாலை நடைபெற்றது.கட்சியின் இடைக்கால பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் சட்டமன்ற துணை தலைவர் மற்றும் துணை செயலாளராக கீழ்க்கண்டவர்கள், கீழ்க்காணும் பதவிகளுக்கு கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தடுக்கப்பட்டுள்ளார்கள்.துணைத்தலைவர்: ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.(திருமாங்கலம் தொகுதி)துணை செயலாளர்:அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.(போளூர் தொகுதி)மேற்கண்ட தகவலை எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் இந்த ஆண்டு சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் 2022 சதுரங்கப் போட்டியில் தமிழகத்தில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.கடந்த 1977ஆம் ஆண்டு முதல் இப்போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 43 செஸ் ஒலிம்பியாட் சர்வதேச போட்டிகளில் ஒரு முறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை. ஆனால் தற்போது 44வது சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு செஸ் ஒலிம்பியாட் 2022 தற்போது இந்தியாவில் அதிலும், தமிழகத்தின் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
