• June 8, 2025
கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி

நாகர்கோவிலில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது, . அந்த பஸ் கோவில்பட்டிக்கு முன்னதாககயத்தார் அரசங்குளம் அருகே எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் பலத்த காயம் அடைந்து ஆம்னி பஸ் டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பயணிகள் காயம் அடைந்தனர், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டனர். விபத்தில் தப்பிய ஒரு சிலர் வேறு பஸ்கள் […]

கோவில்பட்டி

பெண் கொலை: 2 குழந்தைகளுடன் தலைமறைவான கணவர் எங்கே? தேடுதல் வேட்டை தீவிரம்

கோவில்பட்டி சண்முக சிகாமணி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா (24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று தங்கராஜின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.இதனால் அவர்கள் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுஜித், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டின் கதவை உடைத்து […]

செய்திகள்

அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை அவசியம்; நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தல்- டி.ஜெயக்குமார்

சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றத இந்த கூட்டத்திற்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-‘கருத்து கேட்பு என்ற அடிப்படையில் கருத்துக்கள் கேட்கப்பட்டது.அதன் அடிப்படையில் ஆரோக்கியமான அடிப்படையில் நான்கரை மணிநேரம் அமைதியாக நடைபெற்றது என்றால் ஒரு ராணுவ கட்டுப்பாடு உள்ள இயக்கம் கழகம் என்பதை இதன் மூலம் நிச்சயமாக நீங்கள் அறியலாம்.பொதுக்குழு கூடவுள்ள நிலையில் அந்த பொதுக்குழுவை ஒட்டி இன்றைக்கு இந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பெண் கொலை; வீட்டில் பிணமாக கிடந்தார்

கோவில்பட்டி எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கார்த்திகா (வயது 24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இன்று காலை இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் கொவில்பட்ட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.வீட்டினுள் போய் பார்த்தபோது கார்த்திகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டனர். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.கொலை நடந்து 2 நாட்களுக்கு மேல் […]

செய்திகள்

உயர் மருத்துவ சிகிச்சை: டி.ராஜேந்தர் இன்று இரவு அமெரிக்கா பயணம்

சினிமா டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டி.ராஜேந்தரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு இருந்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து டி.ராஜேந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டி.ராஜேந்தரை உயர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து டி.ராஜேந்தரை அமெரிக்கா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடந்தன. விசா நடைமுறைகளும் முடிந்துள்ளன.இதையடுத்து டி.ராஜேந்தர் […]

செய்திகள்

பராமரிப்பு பணி: பழனி ரோப்கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி மலைக் கோவில் சென்று முருகனை தரிசனம் செய்வது வழக்கம்.அவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரெயில் மற்றும் ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தெற்கு கிரி வீதியில் அமைந்துள்ள ரோப் கார் நிலையத்திலிருந்து மலை கோவிலுக்கு செல்லும்போது இயற்கை அழகை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே கும்பாபிஷேக விழாவுக்கு ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர்; கிராம மக்கள் ஆச்சரியம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு தீத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் குடியேறினார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மூத்த மகன் நடராஜன் ஆகியோர் இரும்பு கடை நடத்தி வருகின்றனர். மற்றொரு மகன் ராஜதுரை ஜவுளி கடை வைத்துள்ளார்.நடராஜனுக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டர், விமானம் ஆகியவற்றின் மீது ஈடுபாடு அதிகம். அவற்றில் பயணம் செய்ய வேண்டும் என்பது அவரது […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு பற்றி நிர்வாகிகள் கூட்டத்தில் விரிவான விவாதம்; ஒற்றை தலைமை கோரி,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.வழக்கமாக பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி […]

செய்திகள்

மதுரை கவிஞரின் ‘தீண்டாதே தீயவை’ கவிதை நூல் அறிமுகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பசுமை நகரம் அல் அய்ன் ஆகும். இந்த நகரில் உள்ள அல் அய்ன் இந்தியன் சோஷியல் செண்டரில் மதுரை கவிஞர் இரா.ரவி எழுதிய ‘தீண்டாதே தீயவை’ என்ற கவிதை நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தக பிரமுகர் ஏ. முஹம்மது மஹ்ரூப் ‘தீண்டாதே தீயவை’ நூலை அறிமுகம் செய்து வெளியிட அல் அய்ன் இந்தியன் சோஷியல் செண்டரின் தலைவர் கீழக்கரை முபாரக் முஸ்தபா பெற்றுக் கொண்டார்.அப்போது பேசிய ஏ. முஹம்மது […]

செய்திகள்

கசியும் ரகசியங்களால் செல்போனுக்கு தடை விதித்த அ.தி.மு.க.; கோபத்தில் கூட்டத்தை புறக்கணித்த முன்னாள்

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடக்கிறது,இது தொடர்பாக ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறதகூட்டத்தில் அ.தி.மு.க.வின் அவை தலைவரை தேர்வு செய்வது, பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள், ஜனாதிபதி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், […]