கோவில்பட்டியில் பெண் கொலை; வீட்டில் பிணமாக கிடந்தார்
கோவில்பட்டி எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கார்த்திகா (வயது 24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இன்று காலை இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் கொவில்பட்ட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்
கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.வீட்டினுள் போய் பார்த்தபோது கார்த்திகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டனர். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
கொலை நடந்து 2 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து கார்த்திகா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.’
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தங்கராஜ் அவரது 2 குழந்தைகளையும் தனது தாய்வீட்டில் விட்டுவிட்டு தலை மறைவாக உள்ளார் என்பது தெரிய வந்தது. எனவே கார்த்திகா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனால் தங்கராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கார்த்திகாவின் கணவர் தங்கராஜ் எங்கே சென்றார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.