கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதற்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. முகாம் இன்றும்,நாளை(6-ம் தேதி)யும் நடக்கிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதற்கான முகாமை தொடங்கி வைத்தார். மேலும், பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக காப்பீடு திட்ட அடையாள அட்டையை வழங்கினார். ,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, நகராட்சி பொறியாளர் சணல்குமார், நகர்மன்ற […]
1980-களில் தொடங்கி இன்று வரை அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ’16 வயதினிலே’ படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திர நடிகராக அறிமுகமானார். இதன்பின் கவுண்டமணி தொடர்ந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். நடிகர் கவுண்டமணி, சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். கிட்டதட்ட 50 ஆண்டுகளாக சினிமாவில் […]
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள பாகிஸ்தான் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும். தீவிரவாத செயல்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கோவில்பட்டியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.. நகரத் தலைவர் காளிதாசன், ஒன்றிய தலைவர்கள் புருஷோதராஜா, ராமர் பாண்டியன், முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை […]
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். இந்த சூழலில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர நாளை மறுநாள் (மே 7ம் தேதி) முதல் […]
தி.மு.க. பொதுக்கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம்; ஆ.ராசா எம்.பி. நூலிழையில் தப்பினார்
மயிலாடுதுறை நகர தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சின்ன கடை வீதியில் நேற்று இரவு நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பலத்த காற்று வீசியதால் மேடையின் அருகே பொருத்தப்பட்டிருந்த அதிக வெளிச்சம் தருவதற்காக அமைக்கப்பட்டு இருந்த மின்விளக்கு கம்பம் திடீரென்று சாய்ந்து ஆ.ராசா எம்.பி. பேசிக்கொண்டு இருந்த மைக் வைக்கப்பட்டு இருந்த ‘போடியம்’ மீது விழுந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட ஆ.ராசா எம்.பி. தான் பேசிக்கொண்டு இருந்த மேடை […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாந்தபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்த தம்பதி ராதம்மா-குள்ளப்பா தம்பதியர், பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களை கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமிகாந்த் என்ற நபர் சந்தித்து உங்கள் வீட்டுக்கு அருகில் தங்கப் புதையல் இருக்கிறது என்று கூறி அதை எடுக்க ஆசை காட்டினார். மேலும் புதையலை எடுக்க ஒரு கும்பலையும் அழைத்து வந்தார். இரவில் குழி தோண்டிய அந்த கும்பல் தம்பதியின் கவனத்தை திசை திருப்பி, செயற்கையாகப் புதைக்கப்பட்ட பானையிலிருந்து […]
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதன் முறையாக நீட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 463 பேரும், எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் 348 பேரும் நீட் தேர்வு எழுதினரகள் .காலையிலிருந்து மாணவர்கள், பெற்றோர்கள் […]
நாடு முழுவதும் இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 31 மாவட்டங்கள் நடந்த நீட் தேர்வில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் 480, தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் 360, கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் […]
சாதி வாரி கணக்கெடுப்பின்போது டி.என்.டி. மக்களுக்கு தனிப்பட்டியல் இடம்பெற வேண்டும்; மாநில செயற்குழு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் சீர் மரபினர் பழங்குடிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் நாடோடி பழங்குடியினர் தேசிய கூட்டு நடவடிக்கை இன குழுக்களின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அகில இந்திய டி.என்.டி அரசியல் முன்னணி கூட்டமைப்பு தலைவர் சுப்பாராவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம்,மாநில துணைச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் மகளிர் அணி மாநில தலைவர் விண்ணரசி மல்லிகா வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- […]
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் போர் தொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், போர் என்பது எளிதான விஷயம் […]