தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு இந்துமதி, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் மகேந்திரன், கற்பகம், வார்டு செயலாளர்கள் சசிக்குமார்,செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தூத்துக்குடியை சேர்ந்த, நில உரிமையாளர் ஒருவருக்கு அவரது செல்போனில், தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதில் செல்போன் டவர் அமைத்தால் வருமானம் பெறலாம் என்றும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து மேற்சொன்ன நில உரிமையாளர் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் தான் ஒரு தள பொறியாளர் என்றும் உங்களது நிலத்தில் செல்போன் டவர் அமைத்து வருமானம் பெற்றுத் தருவதாக கூறியதோடு, மேலும் சில நபர்களை அவருக்கு அறிமுகப்படுத்தி செல்போன் டவர் அமைப்பதற்கு ஆவண கட்டணம், பொருட்கள் செலவு, […]
மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்த சரண்யாவை, நேற்று மர்ம நபர்கள் சராமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரண்யா(35) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி சாமுவேல், சரவணன் என்ற இரு மகன்களுடன் மதுரையில் […]
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்ரமணியன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி தன் மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்தார். இதுகுறித்து பார்த்திபன் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு […]
கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் மலை அடிவார கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஓம்சக்தி அம்மன், புலியடி கருப்பசாமி திருக்கோவில் 3ம் ஆண்டு கொடை விழா நடைபெற்றது. கோவில் கொடை விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, தொடர்ந்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம்,அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,ஒன்றிய செயலாளர் போடுசாமி,இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் […]
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கியது. 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18,344 தனித் தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வுகளள் அனைத்தும் மார்ச் 25-ந் தேதி நிறைவடைந்தது. உடனடியாக, விடைத்தாள் திருத்தும் பணிகளும் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கி நடைபெற்றது. இந்தப் பணிகள் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், குலசேகரபுரம், லிங்கம்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். குலசேகரபுரம் கிராம ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள்,வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தனித் தனியாக தரம் பிரித்து வழங்கப்படும் பணிகள், உரக்கிடங்கு அமைக்கும் பணியையும் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா பார்வையிட்டார். மேலும் லிங்கம்பட்டியில், […]
மத்திய உள்துறை அமைச்சகம் பல மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராகும் வகையில் சில மாநிலங்களில் நாளை (புதன்கிழமை) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் வருமாறு:-*எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஏர் சைரன்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். […]
பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கோவில்பட்டியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்ஹாமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பாக கோவில்பட்டி சவுபாக்யா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு மதிமுக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார். இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாநில செயலாளர் க தமிழரசன் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (5.5.2025) தொடங்கி 14.05.2025 வரை நடக்கிறது. நாடார் உறவின்முறை சங்கத்தலைவர். பழனிச்செல்வம். கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மண்டகப்படியாளர்கள், பொதுமக்கள், பெரியோர்கள், மஞ்சள் நீராட்டு இளைஞர்கள் புடைசூழ மங்களப்பொருட்களுடன் மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து காலை 6.மணிக்கு மேல் 7.25 மணிக்குள் மேஷ லக்கனத்தில் கொடியேற்றுவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். கொடியேற்றம் முடிந்ததும் […]