கொல்கத்தாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 5ம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்நாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த இயக்குநர் அருந்ததி அரசு என்பவரின் “திரு” என்ற குறும்படம் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இந்த குறும்படம் திருநங்கையர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், அடுத்த கட்ட நகர்வு குறித்தும் அழுத்தமாக பேசும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட “திரு” என்கிற திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தின் இயக்குநர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் […]
நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் சார்பில் 244 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது.. இவற்றில் சென்னையில் உள்ள கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் கடைசியாக கடந்த 1971-ம் ஆண்டு போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் இன்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.. அதேபோல், இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே மனோகரன், பொதுச் செயலாளர் முனைவர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டியில் கே ஆர் கல்வி நிறுவனம் சார்பாக 14வது ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு அகில இந்திய ஆக்கி போட்டி மே 23ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெறுகிறது இப்போட்டியில் தமிழக ஜூனியர் அணி […]
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 9 […]
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள […]
நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் 1-5-25 முதல் நடைபெற்று வந்த இலவச யோகா & ஆங்கிலப் பயிற்சி முகாம் இன்றுடன் (07.05.2025)நிறைவு பெற்றது. 40 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உறவின் முறைத் தலைவர், உறவின்முறைச் செயலர்,பள்ளி நிர்வாகக்குழுத் தலைவர் மற்றும் செயலர் கலந்து கொண்டனர்.அனைத்து மாணவர்களுக்குமான ஊக்கப்பரிசுகளின் செலவினங்களை உறவின் முறைத்தலைவர் மாரி கண்ணபிரான் ஏற்றுக் கொண்டார். வகுப்பு எடுத்த ஆசிரியர்கள் ஜான் ஸ்டேனி , ச.ரமேஷ், வே.குணசேகரன், ப.கவிதா, வெ.நர்மதா ஆகியோருக்கு நிர்வாகம் […]
மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த பரமாச்சாரியார் சென்னையில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதை கண்டித்து கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் மத கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் பேசிய மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன்,நிர்வாகி நல்லையா, நாம் தமிழர் கட்சி […]
என்எல்சி தமிழ்நாடு பவா் லிமிடெட் நிறுவனம் சாா்பில் தூத்துக்குடியில் செயல்படும் என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில், தலா 500 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அலகுகள் இயங்கி வருகின்றன. இந்த அனல்மின் நிலையத்தில் சுமாா் 1350 க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்கள் தங்களுக்கு நெய்வேலி என்எல்சியில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். மேலும் இது தொடா்பாக […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (6.5.2025) நடைபெற்றது. இந்த குற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் […]
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமைக் கழகம் தாயத்தில் உள்ள பெரியார், அண்ணா திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழகக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு மற்றும் நீர் மோர் வழங்கினார் துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, தி.மு-இராசேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, டி.சி.இராசேந்திரன், மா.வை.மகேந்திரன், பூவை மு.பாபு, கருணாகரன், தென்றல் நிசார் உள்பட பலர் கலந்து […]