• May 6, 2024

கோவில்பட்டியில் முளைப்பாரி, பால்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம்; சுவாமி வேடத்தில் சிறுவர், சிறுமியர்

 கோவில்பட்டியில் முளைப்பாரி, பால்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம்; சுவாமி வேடத்தில்  சிறுவர், சிறுமியர்

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்திவிநாயக்ர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 7 மணிக்கு பால்குட அழைப்பும், தீர்த்தகுட அழைப்பும் நடந்தது,
பகதர்கள் பலர் பால்குடம் சுமந்தும், முளைப்பாரி சுமந்தும் ஊரவலமாக சென்றனர். சிறுவர்கள் சுவாமி வேடமணிந்து கலந்து கொண்டனர்.

,முளைப்பாரி ஊர்வலம்
வேடமணிந்த சிறுவர்கள்


பின்னர் பகல் 11 மணிக்கு மேல் சக்தி விநாயகருக்கும், கோபுர விமான கலசங்களுக்கும் , மூலவருக்கும், உற்சவருக்கும் வருடாபிஷகம் நடைபெற்றது. 12.3௦ மணிக்கு பிறகு சிறப்பு அலங்கார தீப ஆராதனை நடந்தது, இரவு 7 மணிக்கு பிறகு சக்தி விநாயகர் சப்பரத்தில் திருவீதி உலா நடக்கிறது.
நாளை 1-ந்தேதி மாலை 4 மணிக்கு மேல் பொங்கல் விழா நடைபெறுகிறது/. இரவு 7 மணிக்கு மேல் ஸ்ரீ நாராயணகுரு திடலில் டாக்டர் இராம பூதத்தான் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *