கோவில்பட்டியில் முளைப்பாரி, பால்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம்; சுவாமி வேடத்தில் சிறுவர், சிறுமியர்
கோவில்பட்டி புதுக்கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்திவிநாயக்ர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 7 மணிக்கு பால்குட அழைப்பும், தீர்த்தகுட அழைப்பும் நடந்தது,
பகதர்கள் பலர் பால்குடம் சுமந்தும், முளைப்பாரி சுமந்தும் ஊரவலமாக சென்றனர். சிறுவர்கள் சுவாமி வேடமணிந்து கலந்து கொண்டனர்.
பின்னர் பகல் 11 மணிக்கு மேல் சக்தி விநாயகருக்கும், கோபுர விமான கலசங்களுக்கும் , மூலவருக்கும், உற்சவருக்கும் வருடாபிஷகம் நடைபெற்றது. 12.3௦ மணிக்கு பிறகு சிறப்பு அலங்கார தீப ஆராதனை நடந்தது, இரவு 7 மணிக்கு பிறகு சக்தி விநாயகர் சப்பரத்தில் திருவீதி உலா நடக்கிறது.
நாளை 1-ந்தேதி மாலை 4 மணிக்கு மேல் பொங்கல் விழா நடைபெறுகிறது/. இரவு 7 மணிக்கு மேல் ஸ்ரீ நாராயணகுரு திடலில் டாக்டர் இராம பூதத்தான் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது.