கோவில்பட்டியில் ஆக்கி: பரபரப்பான அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணிகள்; இன்று மாலை இறுதிப்போட்டி

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 01ம் தேதி வரை நடைபெற்று வருகின்றது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடின.

இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.
நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி, மும்பை யூனியன் வங்கி அணி, நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி, பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணி, கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணி, புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி, செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் இரயில்வே அணி மற்றும் பெங்களூரு கனரா வங்கி ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்று விளையாடின.

இதில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி, நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி, புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி, செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் இரயில்வே அணி ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி போட்டி
இதில் போட்டியின் ஒன்பதாம் நாளான நேற்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மோதின.
இதில் இரு அணிகளும் 2:2 என்ற கோல் கணக்கில் சமன் பெற்ற நிலையில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டு, அதில் 4:2 என்ற (மொத்தம் 6:4) கோல் கணக்கில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வீரர்கள் மாரீஸ்வரன் சக்திவேல் 18வது நிமிடத்திலும் (பெனால்டி கார்னர்) மற்றும் நாச்சப்பா 60வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மொத்தம் 2 கோல்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர்கள் மந்தீப் மோர் 40வது நிமிடத்திலும் (பெனால்டி கார்னர்) மற்றும் லவ்ப்ரீத் சிங் 54வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மொத்தம் 2 கோல்கள் அடித்தனர்.
பாலாஜி குமார் மற்றும் அஜித் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வீரர் பவன் சிங் சவுகான்-க்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது அரையிறுதி
இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதின.

இதில் 2:0 என்ற கோல் கணக்கில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வீரர்கள் சதீஷ் கொங்காடி 40வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மற்றும் சதீஷ் முண்டா 55வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மொத்தம் 2 கோல்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
சுரேஷ் குமார் மற்றும் அஸ்லாம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வீரர் சதீஷ் கொங்காடி-க்கு வழங்கப்பட்டது.

இன்று மாலை இறுதிப்போட்டி
இன்று 1.5.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதுகின்றன.
இரவு 7.00 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதுகின்றன.

பரிசளிப்பு விழா
தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
,இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.1 லட்சம் ,மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு வல்ன்க்கபப்டுகிறது. மேலும் மூன்று அணிகளுக்கும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பையும் வழங்கப்பட உள்ளது. நான்காவது இடம் பெறும் அணிக்கு நினைவு கோப்பை வழங்கப்படும்.
மேலும், நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த கோல்கீப்பர், சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர், சிறந்த நடுகள ஆட்டக்காரர், சிறந்த முன்வரிசை வீரர், சிறந்த வளர்ந்து வரும் வீரர், மற்றும் போட்டியின் சிறந்த வீரர் ஆகிய தனி நபர் விருதுகளும் வழங்கப்படுகிறது.
