தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்: ஓட்டல் வடையில் கரப்பான் பூச்சி

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள சாலையில் தனியார் காபி ஷாப் மற்றும் ஓட்டல் இயங்கி வருகிறது.
இன்று காலை ஒருவர் ஓட்டலில் இரண்டு இட்லி மற்றும் வெங்காய வடை வாங்கி உள்ளார். அப்போது அவர் வாங்கிய வெங்காய வடைக்குள் கரப்பான் பூச்சி இறந்த நிலையில் இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதனை வீடியோ எடுத்து. சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அது வைரல் ஆனது.

இதற்கிடையே வடைக்குள் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மற்றவர்கள், பாதியிலேயே எழுந்து சென்று விட்டனர்.
பொதுமக்கள் சாப்பிட கூடிய உணவு விஷயத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஓட்டல் நிர்வாகம் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
