• June 6, 2025

கோவில்பட்டி ரெயில்வே பாலத்தில் டயர் வெடித்து நடுவழியில் நின்ற பஸ்; நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

 கோவில்பட்டி ரெயில்வே பாலத்தில் டயர் வெடித்து நடுவழியில் நின்ற பஸ்; நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

கோவில்பட்டி‌ ரெயில்வே சுரங்கபாலத்தை , நகரின் இடையூறு பாலம் என்றே சொல்லும்படியாக இருக்கிறது. பாலம் அமைந்ததில் இருந்து சர்வீஸ் சாலை இல்லாமல் இப்பகுதி மக்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.

மலை பெய்தால் பாலத்தின் நடுப்பகுதியில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தை முடக்கி விடும். ஏதாவது வாகனம்பழுதாகி நின்று விட்டால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கை.

நேற்று முன்தினம் மாலையில் பஸ்நிலையம் அருகே அதிமுகவினர், பாஜக தலைவர் அண்ணாமலை கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது,

போக்குவரத்து போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த நிலையில் ரெயில்வே  பாலத்தின் சாலையில் டயர் வெடித்து அரசு பஸ் பழுதாகி நின்றது. இதனால்  சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில்  108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 

இதனால், பயணிகள் மாற்று பேருந்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் டெப்போ பணியாளர்கள் அங்கு வந்து பஸ் டயரை மாற்றிய பின், அந்த பஸ் அங்கிருந்து  புறப்பட்டு சென்றது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *