கோவிலில் சுவாமி பாதத்தில் பேனாவை வைத்து பூஜை செய்து தேர்வுக்கு சென்ற பிளஸ்-2 மாணவிகள்
தமிழகத்தில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது.. இந்த தேர்வு வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடைபெற்றது,. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிளஸ்-2பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவ மாணவிகள் பலர் செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி கோவிலில் சுவாமி பாதத்தில் தேர்வு எழுதும் பேனாவை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.