• June 9, 2025

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

 தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை இன்று கொண்டாடின.

 கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இன்று 8/2/2024 காலை பேருந்து, மினி பேருந்து,ஆட்டோ,இரு சக்கர வாகனங்கள் மற்றும்,சரக்கு வாகனங்களில் சென்றோருக்கு  விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்து,, வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுவரம் வழங்கினார்,

இந்நிகழ்வில் ஆக்டிவ் மைண்ட் ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன் ராஜா,காவல் உதவி ஆய்வாளர்கள் தர்மராஜ், சுடலை மணி, பாரத ஸ்டேட் வங்கி மேலாளர்கள், முதன்மை மேலாளர் சுதர்சன், சிறு தொழில் கிளை மேலாளர் கணேஷ் குமார் தொண்டு நிர்வாக குழு உறுப்பினர்கள் இராம சுப்ரமணியன், முத்து மாரியப்பன்,மேற்பார்வையாளர் மாடசாமி, கோவில்பட்டி வட்டார ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், நிர்வாகிகள்,  பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *