• June 9, 2025

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் விளையாட்டு விழா

 கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. இதையொட்டி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மாணவிகளின்  கலை நிகழ்ச்சிகள் நடந்தது.தேசிய கொடி ஏற்றப்பட்டு ஒலிம்பிக் தீபமும் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்பிரகாஷ் ராஜன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் முத்து முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். பள்ளி துணை ஆய்வாளர் ரமேஷ்,உதவி தலைமை ஆசிரியர்கள் உஷா ஜோஸ்பின்,கண்ணன்,சீனிவாசன் உள்பட ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் தலைமை ஆசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் காளிராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஆசிரியர் பிரவீன் தொகுத்து வழங்கினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *