பாண்டவர்மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாண்டவர்மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நூலகத்தை பார்வையிட்டார்.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
