1112 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன்; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 1112 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 134 கோடி வங்கி கடன் இணைப்புகளை வழங்கியதுடன் 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்களையும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட திட்ட அலுவலர் வீரபத்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா, மாமன்ற உறுப்பினர் எடின்டா உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்,
