ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சுய தொழில் தொடங்க கடன்/மானியம் வழங்கும் திட்டம்; தூத்துக்குடி தொழில்மைய பொதுமேலாளர் சுவர்ணலதா விளக்கம்
அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம் (AABCS) என்ற பெயரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சுய தொழில் தொடங்க கடன்/மானியம் வழங்கும் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பற்றி தூத்துக்குடி தொழில் மைய பொதுமேலாளர் ஏ.சுவர்ணலதா விளக்கம் அளித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டத்தில் சுயதொழில் தொடங்க கடன்/மானியம் பெற தகுதி:-
*ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும்.(தனி நபர்கள், உரிமையாளர் நிறுவனங்கள், பங்குதாரர் நிறுவனங்கள், பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள்)
*வங்கிகடன் இல்லாமல் சொந்த முதலீட்டில் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்கள்.
வயது:- புதிய தொழில் முனைவோர்களாக இருப்பின் 18 முதல் 55 வயது வரை. தொழில் விரிவாக்கம் செய்வதற்கு வயது வரம்பு இல்லை,.
திட்டமதிப்பீடு:- நேரடி வேளாண்மை தவிர்த்து ஏனைய தொழில்கள்.
- உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு உச்சவரம்பு இல்லை.
- வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சம் முதல்.
- கால்நடை, மீன் மற்றும் தேனீ வளர்ப்பு தொழில்களுக்கு ரூ.25 லட்சம் முதல்.
மானிய உதவி:- திட்ட மதிப்பீட்டில் 35% (அதிகபட்சமாக ரூ.1.50 கோடி) மற்றும் முறையாக செலுத்தும் வட்டியில் 6% மும்முனை வட்டி மானியம் வழங்கப்படும். (அதிகபட்சம் 10 ஆண்டுகள்)
பயிற்சி: கடனுதவி பெரும் விண்ணப்பதாரருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்,
கல்வித்தகுதி: தேவை இல்லை.
வருமான உச்சவரம்பு: இல்லை.
சொந்த முதலீடு: தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:- விண்ணப்பங்கள் www.msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு தூத்துக்குடி தொழில் மைய பொதுமேலாளர் ஏ.சுவர்ணலதா கூறி உள்ளார்.